தரங்கம்பாடியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
மயிலாடுதுறை, ஜுன் 29- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் உள்ள ரேணுகாதேவி மண்டபத்தில், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கில், மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மு.சுந்தரேசன், சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் ஜெயா, பொறையார் காவல் ஆய்வாளர் அண்ணாதுரை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், மீனவ பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜான் சைமன், பள்ளி மாணவர்கள், மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.