tamilnadu

img

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் ஆவேசப் போராட்டம்

சென்னை, ஏப். 19-  அரசுக்காக பணியாற்றிய, பொதுமக்களுக்கு சேவை செய்த எங்களை வயதான காலத்தில் இப்படி அலைய விடுவதா? என போக்குவரத்து ஓய்வூதி யர்கள் ஆவேசப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களின் அக விலைப்படி உயர்வு குறித்த தேர்தல் கால வாக்குறு தியை தமிழக முதலமைச்சர் நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் சென்னையில் கோரிக்கை பேரணி புதனன்று (ஏப். 19) நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து புதன்கிழமை காலை ஆயிரக் கணக்கானோர் சென்னை பல்லவன் சாலையில் திரண்டனர். அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொ துச்செயலாளர் ஆறுமுக நயினார் போராட்டத்தை வாழ்த்திப் பேசுகையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும், சட்டரீதி யான போராட்டங்களையும் நடத்தி வருகிறோம். இரண்டு விதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் உயர்த்தி வழங்கப்படவில்லை. அகவிலைப்படி தொடர்ந்து வழங்குவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே ஓய்வூதிய திட்டம் ஆரம்பிக்கும் போது, டிரஸ்ட் மூலம் ஓய்வூதியம் வழங்கக் கூடாது, கழகங் களே வழங்க வேண்டும் என்று அன்றே வலியுறுத் தினோம்.

நீண்ட கால கோரிக்கை

டிரஸ்ட் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டால் 2017க்கு பிறகு ஓய்வூதியம் மிகப்பெரிய பிரச்சனைக்கு உள்ளா கும் என்று வலியுறுத்தினோம். ஆனால் ஆட்சியா ளர்கள் மீண்டும் மீண்டும் கமிட்டி அமைத்தார்கள். ஊதிய பேச்சுவார்த்தையின் போது, டிரஸ்ட்டை நம்பி ஓய்வூதியம் பெற முடியாது, எனவே போக்குவரத்துக் கழகங்களே ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். வரவுக்கும் செலவுக்குமான வித் தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று 2013ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறோம். பென்ஷனே இல்லாததற்கு நியூ பென்ஷன் ஸ்கீம்  என்று பெயர். இந்த புதிய திட்டத்தில் 90 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். எனவே தற்போதுள்ள ஓய் வூதிய திட்டத்தில் முழுமையான தீர்வு காணப்பட வேண்டும். அதற்கான தொடர் நடவடிக்கைகளை முன்னெடுப்போம். அரசு உடனடியாக பிரச்சனைக ளுக்கு தீர்வு காணவில்லை என்றால் ஜூன் மாதத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்.  பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் வரை வேலை நிறுத்தத்தை தொடர்வோம். பணியில் உள்ள ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள் என அனை வரும் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெ டுப்போம் என்றார். இதுகுறித்து சங்கத்தின் தலைவர்  எஸ்.கிருஷ் ணன் கூறுகையில், போக்குவரத்துக் கழகத்தில் இரவு பகல் பாராது வேலை செய்து ஓய்வு பெற்ற நிலையில்  எங்களுக்கு வழங்க வேண்டிய 90 மாத அகவிலைப் படியை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு  பெறும் நாளன்று வழங்க வேண்டிய பணப்பலன் களை உடனடியாக வழங்காமல் வயதான காலத்தில் எங்களை அலையவிடுவதா என அவர் வேதனை யுடன் கேள்வி எழுப்பினார்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது,  இந்த  அடிமை ஆட்சியை நம்பி போராடினால் பலன் கிடைக் காது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஓய்வூதி யர் பிரச்சனை மட்டுமல்ல, பணியில் இருக்கும் போக்கு வரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார். பின்னர் மாநிலத் தலை வர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் அங்கிருந்து பேர ணியாக புறப்பட்டனர். பேரணியாகச் சென்றவர்களை அண்ணா சாலை அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல் துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் வலுக்கட்டாயமாக சிலரை தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர் நிர்வாகிகள் காவல்  துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை யொட்டி கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. இதில்  மாநிலம் முழுவதிலும் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை 

இதற்கிடையே சம்மேளனத் தலைவர் ஆறுமுக நயினார், சங்கத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணன், பொ துச்செயலாளர் கே.கர்சன், பொருளாளர் வரதராஜன், மாநில செயலாளர் வீரராகவன், துணைச் செயலா ளர் செல்வராஜ், பாலாஜி (மாநகர் போக்குவரத்து கழகம்) ஆகியோர் தலைமைச் செயலகத்தில் போக்கு வரத்து செயலாளர் கோபால், முதலமைச்சரின் தனிப் பிரிவு முதன்மைச் செயலாளர் உமாநாத் ஆகியோ ரை சந்தித்து பேசினர். அப்போது மருத்துவ அலவன்ஸ் 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாகவும், மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் அக விலைப்படியை வழங்க நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் வழங்கப்படும் என்றும், பிற கோரிக்கைகள் முதல் வரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப் படும் என்றும் தெரிவித்ததாக சங்கத்தின் நிர்வாகி கள்  கூறினர்.