கள்ளக்குறிச்சி .நவ,10 – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளராக டி.எம்.ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட 24ஆவது மாநாடு உளுந்தூர்பேட்டையில் நவ. 9, 10 தேதிகளில் நடை பெற்றது. பொது மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உரை யாற்றினார். பிரதிநிதிகள் மாநாட்டை மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் துவக்கி வைத்து பேசினார். இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு வி. சாமிநாதன், ஏ.வி.ஸ்டாலின் மணி, என்.தன லட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் செங் கொடியை உளுந்தூர்பேட்டை நகரின் மூத்த உறுப்பினர் எம்.ஆறுமுகம் ஏற்றி வைத்தார். நினைவு சுடர்- கொடிப் பயணம் முன்னதாக, திருநாவலூர் ஒன்றியம் சார்பில் தோழர் என்.நாராயணசாமி நினைவு சுடரை இ.அலமேலு, கே.சீனி வாசன், கே.அய்யனார், கே.ஆனந்தராஜ் ஆகியோர் எடுத்துக்கொடுக்க எம்.செந்தில் பெற்றுக் கொண்டார். சங்கராபுரம் ஒன்றியம் சார்பில் வை.பழனி,எஸ்.சிவாஜி ஆகியோரின் நினை வாக கொண்டு வந்ததை ஜி.ஆனந்தன் பெற்றுக் கொண்டார். பி. சுப்பிரமணியன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். டி.எஸ்.மோகன் வரவேற்றார். மாவட்டச் செய லாளர் டி.எம்.ஜெய்சங்கர் வேலை அறிக்கையை சமர்ப் பித்தார். வரவு-செலவு அறிக்கையை எம்.கே.பூவ ராகவன் சமர்ப்பித்தார். மாநிலக் குழு உறுப்பினர் பி.ஜான்சி ராணி வாழ்த்திப் பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் நிறைவுரையாற்றினார். வர வேற்புக்குழு தலைவர் பி. சேகர் நன்றி உரையாற்றி னார்.
புதிய மாவட்டக்குழு தேர்வு
இம் மாநாட்டில் 35 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக டி.எம்.ஜெய்சங்கர் தேர்வு செய்யப்பட்டார். டி.எம். ஜெய்சங்கர், ஜி,ஆனந்தன், டி.ஏழுமலை, பி.சுப்பிர மணியன், எம்.கே.பூவராக வன், எம்.செந்தில், வி.ஏழு மலை, இ.அலமேலு, எம்.கே. பழனி, வி.ரகுராமன், ஜெ,ஜெய குமார் ஆகியோர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் புதிதாக ரிங் ரோடு அமைக்க வேண் டும். உளுந்தூர்பேட்டையில் புதிதாக கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். பெண் களுக்கு எதிரான சமூக குற்றங்களை தடுக்க வேண் டும். கல்வராயன் மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சான்று வழங்கவும் வனத் துறை, காவல்துறை ,வரு வாய்த்துறை அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 48 தீர்மானங்கள் நிறைவேற்றப் ப்பட்டன.