tamilnadu

img

கூட்டுறவு அங்காடிகளில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை துவங்கியது

சென்னை, அக்.28- தீபாவளி பண்டிகையை அனைத்துத் தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் கூட்டுறவுத் துறையின் மூலம்  ‘கூட்டு றவு கொண்டாட்டம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டக சாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை  அக்டோபர் 28 முதல் நடைபெற உள்ளது என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப் பொருட்கள் அடங்கிய தீபா வளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. அதில், பிரீமியம், எலைட் என இரண்டு வகையாக தீபா வளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. சிறப்புத் தொகுப்பு விற்பனையில் அதிரசம்-முறுக்கு காம்போ விற்பனை தொகுப்பும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரீமியம் தொகுப்பு ரூ.199 என்ற விலையிலும் எலைட் தொகுப்பு ரூ.299 என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. அதிரசம்-முறுக்கு காம்போ தொகுப்பு ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரி வித்துள்ளார்.