tamilnadu

img

இனம், மொழி, பண்பாடு கலாச்சாரத்தை அறிய வரலாற்றை முறையாக பதிவு செய்ய வேண்டும்

திண்டுக்கல், அக்.12- ஒரு இனத்தை, ஒரு மொழியை, ஒரு  பண்பாட்டை, ஒரு கலாச்சாரத்தை அனைத்தையுமே அறிந்து கொள்வதற்கு அதன் வரலாறு முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று  திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.  புத்தகத் திருவிழாவில் திண்டுக்கல் முன்னாள் மாவட்ட ஆட்சியரும் ஜவுளித் துறை ஆணையருமான மா.வள்ளலார் எழுதிய, ‘‘திண்டுக்கல்லில் எழுதிய வர லாறு’’ என்ற நூலை நீதிபதி மகாதேவன் வெளியிட, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பெற்றுக் கொண்டார்.  பின்னர் நீதிபதி மகாதேவன் உரையாற்றியதாவது:  

சங்க இலக்கியத்தில்  தமிழ்மொழி சரித்திரங்கள் 

உலகின் உன்னதமான மொழியாக அறியப்பட்ட தமிழ் மொழியிலே சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்களை நீங்கள் எடுத்துப் பார்த்தீர்களேயானால் ஒரு சிறு குழந்தையில் இருந்து துவங்கி, ஒரு இளைஞனுக்கு, ஒரு சிறு பெண்ணுக்கு, நடுத்தர வயதில் வாழ்ந்து செல்லக்கூடிய ஒரு மனிதனுக்கு, நடுத்தர வயதைத் தாண்டி இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு வனுக்கு, வாழ்க்கையின் அனைத்துக் கூறு களையும் அறிந்துவிட்டு அனுபவத்தின் உச்சத்தில் நின்று பார்க்கக்கூடிய ஒரு வயோ திகனுக்கு, அதையும் தாண்டி முதுமை யை சந்தித்துவிட்ட ஒருவனுக்கு என்று  வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளுக் கும் பாடல் வடிவங்களாக தந்திருக்கக்கூடி யவை சங்க இலக்கிய பாடல்கள். ஆதி  மொழியான தமிழ் மொழியின் சரித்திரங் கள் சங்க இலக்கியத்தில் புதைந்து கிடக்கின்றன.  ஒரு ஊர் சிறந்த ஊராக இருக்க வேண்டும். அந்த ஊரின் அமைப்பு எத்தன் மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். அந்த  ஊரைச்சார்ந்த மக்கள் எப்படிப்பட்ட வர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அறச்சிந்தனை உள்ள மக்களாக இருந்து விட்டார்களேயானால் அந்த மண்ணும், அந்த மொழியும், அந்த மக்கள் சார்ந்த வாழ்க்கையும் எவ்வாறு இருக்கும் என்ப தற்கு தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளி யான கம்பன் ஒரு பாடலைத் தந்தான். நல்ல சிந்தனையும், ஒழுக்கமான வாழ்க்கையை யும் வாழக்கூடிய மக்கள் தங்கள் வாழ்க்கை யை நடத்துவதற்காக கடல் கடந்து செல் கிறார்கள் என்றால், அவர்கள் திரும்பி வரு கையிலே அவர்கள் கலங்கள் முழுக்க பொன்னும், மணியும், நவரத்தினங்களும் செல்வங்களாக கொண்டு வந்து சேர்ப்பா ர்கள். இந்த மக்களுடைய வாழ்க்கை அறம் சார்ந்த வாழ்க்கையாக இருப்பதால் அந்த வாழ்க்கையை வாழக்கூடிய மக்கள் எந்த இடத்திலே விதைக்கிறார்களோ அந்த நிலம் அவர்களுக்கு வாரி வழங்கும்.

ஒரு மாவட்ட ஆட்சியராக இருந்து அந்த மாவட்டத்தின் அனைத்துக் கூறுகளை யும் உள்வாங்கி, இந்த மாவட்டம் சமீ பத்திலே உருவானதா? இதற்கான சரித்திர பின்புலம் என்ன? என்று துவங்கி, சங்க காலப்பாடல்களிலே இந்த மண்ணைப் பற்றிய குறிப்புகள் இருக்கிறதா? என்று ஆராய்ச்சி செய்து சிலப்பதிகாரத்திலே ‘தென் னவன்’ என்ற வார்த்தை உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது என்று சொன்னால் அந்த வார்த்தை எப்படி திண்டுக்கல் என்ற வார்த்தையோடு இணைந்து செல்ல முடி யும் என்கிற ஆராய்ச்சி செய்து, வள்ள லார் வடித்திருக்கிற இந்த நூல் ஒரு  வரலாற்று ஆவணம் என்று சொன்னால் அதில் சிறிதும் குறைவல்ல. சிலப்பதி காரத்திலே, அகநானூற்றிலே, ஆற்றுப் படை நூல்களில் உள்ள பல்வேறு பாடல் களிலே, பின்னால் வந்த பட்டினத்தார் பாடல்களிலே, அருணகிரி நாதருடைய திருப்புகழிலே, திண்டுக்கல் பற்றிய தகவல் கள் இருக்கின்றன என்று சரித்திரத்தை பின் னோக்கிச் சென்று பார்த்து இந்த மண்ணி னுடைய மகத்துவத்தை உங்களுக்காக பதிவு செய்திருக்கிறார் வள்ளலார்.  திண்டீஸ்வரம் என்று அழைக்கப்பட்டு பத்மாசனம் என்ற பெயரும் கொண்ட, ‘அபி ராம அம்பிக்கை’ என்ற ஒரு திருத்தலத் தைக் கொண்டிருக்கக்கூடிய இந்த திண்டுக் கல் இரண்டு மலைகளுக்கு இடையே  அமைந்திருந்தாலும், ஆதி காலத்தி லேயே இந்த மக்கள் இந்த மண்ணிலே  வாழ்ந்திருக்கிறார்கள் என்று அறியப் பட்டாலும், பல்வேறு குகைகளிலே இருக்கக் கூடிய ஓவியங்கள் மூலமாகவும், வரி வடிவங்கள் மூலமாகவும் இந்த மண்ணைப் பற்றி ஏற்படுத்தியிருக்கக்கூடிய தகவல் களின் அடிப்படையிலும் திண்டுக்கல் சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த  மண்.  

நாசாவில் திப்புவின்  ஏவுகணை ஓவியம்

ஏவுகணை என்கிற ஒரு அறிவியல் கூறு. இன்றைக்கு நாம் பல்வேறு கிரகங் களுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்துகொ ண்டிருக்கிறோம் என்று மார்த்தட்டிக் கொண்டிருக்கிறோம். அதற்கு அடிப்படை ஆதார கர்த்தாவாக இருந்தது திப்பு சுல்தான் தான் என்று அப்துல் கலாம் சொன்னார். அமெரிக்காவின் நாசாவில் திப்புவின் ஏவுகணை குறித்த ஓவியத்தை வரைந்து வைத்திருக்கிறார்கள். இதனை பதிவு செய்து தாய் நாட்டில் இருக்கிறவர்கள் மறந்துவிட்ட ஒரு விசயத்தை அமெரிக்கர் கள் அனுசரணையோடு நினைவு கூர்ந்திருக்கிறார்கள் என்று அப்துல் கலாம் சொன்ன திப்புவின் பெருமைகளை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் வள்ளலார்.  திண்டுக்கல் மண்ணின் மகத்து வத்தை அற்புதமான நூலாக ஆயிரக் கணக்கான தரவுகள் மற்றும் புள்ளி விவ ரங்கள் சார்ந்து வள்ளலார் எழுதியுள்ளார். இந்த மண்ணின் மீது அவருக்கிருந்த இயல்பான காதலினால் இந்த நூல் அற்புதமாக வந்திருக்கிறது. இந்த நூலிலே 13-ஆம் நூற்றாண்டைப் பற்றி சொல் கிறார். ஆசியாவிலேயே பாண்டியர்கள் ஆட்சி செய்த காலம் போல ஒரு ஆட்சிக் காலம் எந்தவொரு இடத்திலும் பதிவு  செய்யப்படவில்லை என்பதை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். சரித்திரங் களை பதிவு செய்தவர்களும் ஒரு காலக் கட்டத்தில் சரித்திரமாகத்தான் பார்க்கப்படு வார்கள்.  இவ்வாறு அவர் பேசினார். (நநி)