டென்னிஸ் உலகில் முன்னணி வீரராக இருக்கும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 20 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரை கைப்பற்றியவர். இது போக ஒலிம்பிக் பதக்கம், உலக சாம்பியன் தொடர் என அனைத்திலும் பட்டம் வென்று வரலாறு படைத்தவர். உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்தாலும் இது வரை ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை. காரணம் கேட்டால், “எனக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை இல்லை” எனக் கூறிவிடுகிறார். பல்வேறு நாடு களில் நடைபெற்ற தொடர்களில் முன்னணி வீரர் பெருமையை வைத்து விலக்கு பெற்று டென்னிஸ் தொடர்களில் களமிறங்கினார். டென் னிஸ் அரங்கில் நடைமுறைப்படுத்தப்படும் கொரோனா பாதுகாப்பு வளைய வழிகாட்டு நெறிமுறைகளில் சில நாடுகள் ஜோகோவிச்சுக் காக மாற்றம் செய்தது. அதாவது ஜோகோவிச் உலக சாம்பியனாக இருப்பதால் எதற்கு வம்பு என தடுப்பூசி கொள்கைகளில் அவருக்கு மட்டும் தனி அனுமதி கொடுத்த நாடுகளும் உள்ளன. இதனால் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசியை பற்றியே அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து டென்னிஸ் தொடரில் விளையாடி வந்தார்.
தைரியமான முடிவு எடுத்த ஆஸ்திரேலியா
நடப்பாண்டின் முதல் டென்னிஸ் தொட ரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தொட ரில் பங்கேற்க ஆஸ்திரேலிய ஓபன் நிர்வாகம் ஜோகோவிச்சிற்கு மட்டும் தடுப்பூசி நெறிமுறை களில் விலக்கு அறிவித்தது. இதனால் ஜோகோவிச் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். திடீரென ஆஸ்திரேலிய அரசு அதிரடியில் களமிறங்க ஜோகோவிச் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். உலக சாம்பியனாக இருந் தால் என்ன தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதி வழங்கப் படும். இல்லையென்றால் விசா கிடையாது என ஆஸ்திரேலிய அரசாங்கம் கறராக கூறிவிட்டது. மேலும் தடுப்பூசி கொள்கையில் ஜோகோ விச்சிற்கு விலக்கு அளித்தது தொடர்பாக ஆஸ்தி ரேலிய ஓபன் டென்னிஸ் நிர்வாகம் மீது அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குவியும் பாராட்டு
ஜோகோவிச்சிற்கு எதிராக ஆஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த முடிவை சமூக வலைத் தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர்.