tamilnadu

img

பட்டியல் வெளியேற்றத்திற்கு எதிராக மாநில அளவில் மாநாடு

மதுரை, நவ. 15 - தேவேந்திர குல வேளாளர் மக்களை பட்டியல் வகுப்பிலிருந்து வெளியேற்றும் முயற்சிக்கு எதிராக 2023 ஜனவரியில் மாநில அளவில்  மாநாடு நடத்தப்போவதாக தேவேந் திரர் சமூகப் பாதுகாப்புக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடை யன், வாதிரியான் ஆகிய 7  உட்பிரிவுகளை உள்ளடக்கிய தேவேந்திர குல மக்களை, பட்டியல் (Scheduled Caste) வகுப்பி லிருந்து வெளியேற்ற வேண்டும் என தேவேந்திர குல வேளாளர்களிலேயே ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பாஜக ஆதரவு நிலை கொண்ட நபர்கள், அமித்ஷா முன்னிலை யில் எழுப்பிய இந்த கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசும் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளது. ஆனால், தேவேந்திர குல வேளாளர் மக்களின் கருத்தை அறியாமல், அவர்களின் எதிர்காலத்தோடு விளை யாடும் விபரீத சதித்திட்டம் என்று தேவேந்திரர் சமூக மக்களின் முன் னேற்றத்திற்காக நீண்டகாலமாக பாடு பட்டு வரும் தலைவர்கள் - அமைப்புக் கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தேவேந்திரர் சமூக  பாதுகாப்பு கூட்டமைப்பின், பட்டியல்  வெளியேற்ற எதிர்ப்பு பொது ஆய்வரங்கம் மற்றும் மாநில செயற் குழு கூட்டம், கடந்த ஞாயிறன்று மதுரை  இறையியல் கல்லூரியில் நடை பெற்றது. 

பொறியாளர் மு. ஊர்காவலன் தலைமை வகித்தார். தியாகி இமானு வேல் பேரவை தலைவர் பூ. சந்திர போசு முன்னிலை வகித்தார். வழக்கறி ஞர் ஏ. சுந்தரவடிவேல் வரவேற்றார்.  தமிழ்நாடு எஸ்.சி., எஸ்.டி., அசோசி யேசன் தலைவர் கருப்பையா, வழக்க றிஞர் பொன்.முருகேசன் (மக்கள் மறு மலர்ச்சி கட்சி- திருச்சி), டாக்டர் கனக சபை, வழக்கறிஞர் சின்னராசா, ஈரோடு சந்திரமோகன் (அகம் பவுண்டேசன்), வழக்கறிஞர்கள் வி.பி. இன்குலாப், கருப்பையா, ஜான்பாண்டியன் சகோத ரர் சிவ. ஜெயப்பிரகாஷ், நெல்லை முரு கன் கண்ணா, தொழிலதிபர் முத்துச்  சாமி, அனுப்பானடி ஜி. அசோக், வேலுச்  சாமி உள்ளிட்டோர் கருத்துரையாற்றி னர். சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் சு.க.முருகவேல்ராஜன் (மக்கள்  விடுதலைக் கட்சி) சிறப்புரையாற்றி னார். மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தேவேந்திரர் மக்களை பட்டியல் வகுப்பிலிருந்து நீக்கும் முயற்சியை ஒருபோதும் ஏற்க முடியாது; இது பெரும்பான்மையான தேவேந்திரர் மக்களின் கோரிக்கை அல்ல; சில சுயநல சக்திகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும், சென்னை பல்கலைக்கழக மானுடவி யல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சுமதி, தங்கராசு போன்ற ஆர்எஸ்எஸ்  அங்கத்தினர்களாலும் மட்டுமே  இக்கோரிக்கை முன்வைக்கப்படு கிறது. உள்நோக்கம் கொண்ட பொய் யான ஆய்வறிக்கைகள் மூலமாக தேவேந்திர குல வேளாளர் இளை ஞர்களை திசைத்திருப்பும் முயற்சி நடக்கிறது. இது தேவேந்திரர் மக்களின் சமூக, அரசியல், பொரு ளாதார உரிமைகளைக் காவு வாங்கும் ஆர்எஸ்எஸ், பாஜக-வின் சதித் திட்டங்களில் ஒன்றே ஆகும். 90 விழுக்காடு தேவேந்திர சமூக மக்கள் பட்டியல் வெளியேற்றத்திற்கு எதிராகவே உள்ளனர். எனவே, சுயநல சக்திகள் மற்றும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் சதித் திட்டத்தை முறியடிக்கும் வகையில், 2023 ஜனவரியில், பட்டியல் வெளியேற்றத்திற்கு எதிராக மாபெரும் மாநாடு நடத்துவது;

மாநாட்டிற்கு, தேவேந்திரர் சமுதாய முன்னோடிகளை மட்டுமன்றி, பட்டியல் வெளியேற்ற எதிர்ப்பு நிலைபாட்டில் உடன்பாடு கொண்ட அனைத்து அரசியல் கட்சிகள் - அமைப்புக்களின் தலைவர்களை அழைப்பது; முன்னதாக பட்டியல் சாதி களுக்கான தேசிய ஆணையம் உள்ளிட்ட அரசு அமைப்புக்களுக்கு முறையீடுகளை அனுப்புவது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது, பட்டியல் வெளி யேற்றம் என்ற பின்னணியில் உள்ள  சூழ்ச்சியையும், இதனால் தேவேந்திர குல வேளாளர் மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம்,  வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மூலமான பாதுகாப்பு ஆகியவை எந்த  அளவிற்கு பறிபோகும்; இன்றும் விவசா யக் குடிகளாக - உழைக்கும் மக்களாக இருக்கும் தேவேந்திரர் மக்களின் எதிர் காலம் பாதிக்கப்படும் என்பதை விளக்கி, கிராமங்கள் தோறும் விரிவான பிரச்சாரத்தை நடத்துவது; சென்னை, கோவை, மதுரை, திருச்சி,  நெல்லை என மண்டல அளவில் மாநாடுகளை நடத்தி, இறுதியாக மாநில  அளவிலான மாநாட்டை 2023 ஜனவரியில் நடத்துவது என்று  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள் ளது.