புதுதில்லி, பிப்.11- மாநில மொழிகளில் உயர்நீதி மன்றங்களில் வழக்காடுவதற்கு ஒன் றிய அரசு முயற்சிகள் எடுத்து வருகி றதா? இதற்காக மாநில அரசுகளிடம் ஒத்துழைப்பு எந்த அளவுக்கு கேட்கப் பட்டுள்ளன? மாநில மொழிகளிலும் நீதி முறைமை அமைய பொது சட்ட அகராதியை ஒன்றிய அரசு தயாரித் துள்ளதா? என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி யிருந்தார். இதற்கு ஒன்றிய சட்டம்- நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித் துள்ளார். அதில், “உச்சநீதிமன்றம் மற்றும் எல்லா உயர்நீதி மன்றங்களிலும் அவற்றின் நடைமுறைகள் அனைத் தும் ஆங்கிலத்திலேயே அமையும் என அரசியல் சட்டப் பிரிவு 348 (1) (ஏ) கூறு கிறது. மேற்கண்ட பிரிவு (1) (ஏ) இல் தெரி விக்கப்பட்டதைக் கடந்து ஆளுநர், குடி யரசு தலைவரின் முன் அனுமதியுடன், உயர்நீதிமன்ற முதன்மை இருக்கை அமைந்துள்ள அம்மாநிலத்தில் அந்த நீதிமன்ற நடைமுறைகள் இந்தியிலோ அல்லது அலுவல் நோக்கங்களுக்கு அம்மாநிலத்தில் பயன்படுத்தப்படும் வேறு மொழிகளிலோ அமைவதை அங்கீகரிக்கலாம் என அரசியல் சட்டப் பிரிவு 348 (2) கூறுகிறது. 21.05.1965 தேதியிட்ட அமைச்சர வைக் குழு முடிவின்படி, உயர்நீதிமன் றங்களில் ஆங்கிலம் தவிர்த்த மொழி களைப் பயன்படுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இந்திக்கு கிட்டிய அனுமதி
இராஜஸ்தான் உயர்நீதிமன்ற நடைமுறைகளில் இந்தியைப் பயன் படுத்துவதற்கான அங்கீகாரம் அரசி யல் சட்டப் பிரிவு 348 (2) இன் அடிப்படை யில் 1950 இல் வழங்கப்பட்டது. 21.5. 1965 தேதியிட்ட அமைச்சரவைக் குழு முடிவுக்கு பிறகு இந்தி பயன்பாடு உத்த ரப்பிரதேசம் (1969), மத்தியப் பிர தேசம் (1971), பீகார் (1972) ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்க ளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யுடன் கலந்தாலோசனை செய்து வழங்கப்பட்டது. இந்திய அரசுக்கு தமிழ்நாடு, குஜ ராத், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ், குஜராத்தி, இந்தி, வங் காளி, கன்னடம் ஆகிய மொழிகளை முறையே சென்னை உயர்நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் , கல்கத்தா உயர்நீதி மன்றம், கர்நாடகா உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் அனுமதிக்குமாறு மாநில அரசுகள் முன் மொழிவுகளை அனுப்பி இருந்தன. உச் நீதிமன்ற தலைமை நீதிபதியின் அறிவுரை இம் முன் மொழிவுகள் மீது கோரப்பட்டது. முழு நீதிமன்றம் இது குறித்து உரிய பரிசீலனை செய்து முன் மொழிவு களை ஏற்பதில்லை என்று முடிவு எடுத்த தாக தெரிவிக்கப்பட்டது.
தமிழுக்கு மீண்டும் மறுப்பு
தமிழ்நாடு அரசிடம் இருந்து வந்த இன்னொரு வேண்டுகோளின் அடிப்ப டையில் இது குறித்த முந்தைய முடிவை மறு பரிசீலனை செய்யுமாறும், உச்சநீதிமன்ற ஒப்புதலை தெரிவிக்கு மாறும் தலைமை நீதிபதியை அரசு கேட்டுக்கொண்டது. விரிவான பரிசீல னைக்கு பின்னர் முன் மொழிவுக்கு முழு நீதிமன்றம் ஒப்புதல் தருவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும், முந்தைய முடிவையே மீண்டும் வலி யுறுத்துவதாகவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். எல்லா மொழிகளுக்கும் பொருந்து கிற வகையில், மாநில மொழிகளில் சட்ட ஆவணங்களை உருவாக்க உதவி செய்யும் வகையில் பொது சட்ட கலைச் சொல் அகராதியை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியை ஒன்றிய சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய பார் கவுன்சில் அமைத்துள்ள முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ. போப்டே தலைமையி லான “பாரதீய பாஷா சமிதி” குழு செய்து வருகிறது.” என்று அமைச்சர் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சு.வெங்கடேசன் எம்.பி.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., கூறுகையில் “இந்திக்கு இராஜஸ் தான் உயர்நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்து 72 ஆண்டுகள் ஆகிவிட்டன. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிர தேசம், பீகார் மாநிலங்களில் இந்தி அனுமதிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் தமிழ் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக அங்கீ கரிக்கப்படுவது இன்று வரை கை கூட வில்லை என்பது வேதனைக்குரியது. இந்திய நாட்டின் மொழிப் பன்மைத்து வத்தை கருத்தில் கொண்டு இந்திய நீதி முறைமையில் மாநில மொழிகள் இணைக்கப்படுவதற்கான காலம் வந்து விட்டது; நீதிமன்றங்கள் மற்றும் ஜனநாயகத்தின் இதர அமைப்புகளும் சமூக - புவிசார் பன்மைத்துவத்தை கண்ணாடி போல பிரதிபலிக்க வேண் டும் என்று 2022 ஏப்ரல் மாதம் மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு மாநாட்டில் அன்றைய தலைமை நீதிபதி என். வி. இரமணா பேசினார். இருந்தாலும் இக் கோரிக்கை ஈடேறவில்லை. இது நிதித் துறையில் தொடரும் அசமத்துவத்தின் சாட்சியாகும்” என்று தெரிவித்தார்.