சென்னை, பிப். 21- பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிலாளர்கள் ஆவேசத் துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்காதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய கூட்டு போரட்டக் குழு சார்பில் நாடு முழுவதும் ரயில்வே, பாதுகாப்புத் துறை, ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன் செவ்வாயன்று (பிப். 21) ஆர்ப்பாட்டங்கள், வாயிற் கூட்டங்கள், பேரணி என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக ஐசிஎப் அனைத்து தொழிற்சங்க போராட்டக் குழு சார்பில் மேலாளர் அலுவலகத்தில் இருந்து பேரணி துவங்கி, ஐசிஎப் விளையாட்டு மைதானம் வரை நடை பெற்றது. பின்னர் நடைபெற்ற கூட்டத் திற்கு திமுக ஐசிஎப் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் வ.முரளிதரன் தலைமை தாங்கினார். பி.மோகன்தாஸ் (ஒருங்கிணைப்பாளர்), எஸ்.ராம லிங்கம், பா.ராஜாராமன் (சிஐடியு), ராஜேந்திரன் (ஏஐடியுசி), டி.மனோ கரன் (ஏஐஆர்எப்), டி.எம்.செந்தில் குமார் (என்எப்ஐஆர்), சுந்தர் (கார்மிக்), ராமமூர்த்தி (ஓபிசி), சாந்தகுமார், மங்காராமன் (எஸ்சி, எஸ்டி), கோபி நாத் (ஐஆர்டிஎஸ்ஏ), கார்த்திக் (ஐஎஸ்சி), தனுஷ் (அண்ணா தொழிற் சங்கம்), ராஜேஷ் (மினிஸ்டீரியல் குமாஸ்தா அசோசியேஷன்) ஆகி யோர் பேசினர்.
இதுகுறித்து தலைவர்கள் கூறுகையில்,ஐசிஎப் வந்தே பாரத் ரயில்” உற்பத்தியை தொழில் நுட்ப கூட்டு என்ற பெயரில் டெண்டர் விட்டு 1 மேதா, பம்பாடியர், சிமென்ஸ் போன்ற பன்னாட்டு தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் ஐசிஎப் தொழிற்சாலைக்குள்ளேயே தனியார் கார்ப்பரேட் முதலாளிகளை அனுமதித்து கொள்ளை லாபம் ஈட்டு வதற்கு வழிவகுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். வந்தே பாரத் ரயில் 18 வடிவமைப்பு, வரைபடம் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (பிஇஎம்எல்) நிறுவனத்திடம் அளித்து அங்கே உற்பத்தி செய்ய ஒன்றிய பாஜக அரசின் ரயில்வே அமைச்சகம் திட்ட மிடுவதாக தெரிகிறது, ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு நவீன கோச் தொழிற்சாலை (எம்சிஎப்) 18 வரைபடத்துடன் கொடுத்து தனி யாருக்கு தாரை வார்க்க முயற்சித்தது போல் தற்போது பொது துறையான பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திடம் கொடுப்பது போல் கொடுத்து விட்டு, பின்னர் தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக அரசையும், ரயில்வே அமைச் சகத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
எல்எச்பி டிவிசனில் 136 கோடி ரூபாய் செலவில் 2018இல் உருவாக் கப்பட்டுள்ள நவீன வீல் அண்டு ஆக்சில் லைன் கடந்த 4 வருடங்களாக உற்பத்தி துவக்கப்படாமல் இருப்ப தன் காரணம் என்ன? இதையும் தனியார் ஒப்பந்தம் விட பேரம் பேசப்படு கிறதா? என சந்தேகம் எழுகிறது. எனவே உடனடியாக ஐசிஎப் தொழிலாளர்க ளுக்கு உரிய பயிற்சி அளித்து உற்பத் தியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்ஆர்சி, ஆர்ஆர்பி மூலம் ஐசிஎப்-க்கு தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கான மெடிக்கல் தேர்வை விரைந்து முடித்து, குரூப்-டி, குரூப்-சி காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். 10 வருடங்களுக்கும் மேல் பதவி உயர்வு இன்றி அவதியுறும் குரூப்-டி தொழிலாளருக்கு ஸ்கில்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் இல்லையென்றால் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர்ச்சியான போராட்டங் களை முன்னெடுப்போம் என்றனர்.