சென்னை, டிச. 31- ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து 2023ஆம் ஆண்டு தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக அகில இந்திய பாது காப்புத் துறை ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசு பாதுகாப்புத் துறை தொழிற்சாலைகளுக்கும் அதில் பணிபுரியும் 4 லட்சம் தொழி லாளர்களுக்கும் எதிராக எடுக்கும் முடிவுகளை எதிர்த்து அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனமும் அதனுடன் இணைப்பு பெற்ற 436 தொழிற்சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன. ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக வழங்கிய உறுதிமொழிகளையும் ஒப்பந்தங்களையும் மீறி 220 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஆயுத தொழிற்சாலைகளை 7 கார்ப் பரேஷன்களாக தற்போதைய ஒன்றிய அரசு உடைத்துள்ளது.
மீறப்பட்ட உறுதிமொழி
ஆயுத தொழிற்சாலைகள் கார்ப்பரேஷன்களாக மாற்றப்பட்டா லும் அவற்றிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்பது உட்பட பல உறுதிமொழிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்தார். ஆனால் அவை அனைத்தும் செயலற்றுப் போனது. ஆயுத தொழிற்சாலைகளுக்கு 2023-24ஆம் ஆண்டு 50 விழுக்காட்டிற்கும் மேல் பணிகள் வழங்கப்படவில்லை. ஜபல்பூரில் அமைந்துள்ள ஜிஐஎப் மற்றும் விஎப்ஜெ தொழிற்சாலைகள் பணிகளை பெறுவதற்காக போராடிக் கொண்டிருக்கின்றன.
அவுட்சோர்சிங்
ணிகள் இருந்தும் அவை அனைத் தும் அவுட் சோர்சிங் விடப்படு கின்றன. கமாரியா தொழிற்சாலை யில் தற்போதைக்கு பணிகள் இருந்தா லும் போதிய ஆட்கள் இல்லாததால் உற்பத்தி இலக்கை எட்ட முடிய வில்லை. டிசிஎல் கார்ப்பரேஷனுக்கு கீழ்வரும் நான்கு தொழிற்சாலை களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணிகள் இல்லை. அவற்றில் பணி யாற்றும் 7000தொழிலாளர்களின் வாழ் வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மேற்கூறிய பிரச்சனைகள் குறித்து சம்மேளனம் சார்பில் பாது காப்புத்துறை அமைச்சருக்கு பல முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசியமான ஆலைகள் அண்மையில் அளித்த கடிதத்தில், பாதுகாப்புத் துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 5.25 லட்சம் கோடி ரூபாய். இவற்றிலிருந்து ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவை 20,000 கோடி ரூபாய்க்கான பணிகளை ஆயுத தொழிற்சாலை களுக்கு வழங்க முடியும். அதன் மூலம் அந்த தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பயனடைவதோடு அவற்றின் முழு கட்டமைப்புக்கும் பயன்படும். ஆயுத தொழிற்சாலைகள் அனைத்தும் போர் நேரிடும்போது தேவைப்படும் அத்தியாவசியமான தொழிற்சாலைகள். எனவே நமது நாட்டின் பாது காப்பு கருதி அவற்றை நலிவடை யச் செய்யாமல் தொடர்ந்து உயிர்ப்புடனும், துடிப்புடனும் வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் மொத்த நிதி ஒதுக்கீட்டில் வெறும் 3 விழுக்காடு மட்டுமே ஆயுத தொழிற்சாலைகள் இயங்க தேவைப்படுகிறது. எனவே அரசு அந்த நிதியை அளிக்க வேண்டும்.
கார்ப்பரேஷனாக மாற்றப்பட்ட பின்னர் ஆயுத தொழிற்சாலைகளின் பல பிரச்சனைகளுக்கு இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை. உயிரிழந்த பல தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் ஆலையில் விபத்தின்போது உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்தினருக்கும் கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படவில்லை. ஆயுத தொழிற்சாலை தொழிலாளர்க ளுக்கும் அவர்தம் குடும்பத்தின ருக்கும் தேவையான மருந்து கள் ஆயுத தொழிலக மருத்துவமனை களால் வழங்கப்படுவதில்லை. ஆயுத தொழிற்சாலைகளில் புதிதாத ஆட்கள் நியமனம் செய்வதை அரசு நிறுத்திவிட்டது. இதனால் பயிற்சி முடித்த தொழிலாளர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி விட்டது.
தொடர் போராட்டம்
எனவே கார்ப்பரேஷனாக மாற்றப்பட்டதை திரும்பப்பெற வேண்டும் என்றும், அரசு ஊழி யர்களாக பணியில் சேர்ந்த ஆயுத தொழிற்சாலை தொழிலாளர்கள் அரசு ஊழியர்களாகவே பணி ஓய்வு பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும், போராடிக் கொண்டிருக்கிறோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக ரயில்வே, பாது காப்புத்துறை, தபால், வருமான வரி, மத்திய செயலகம் உள்ளிட்ட பல ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பான தேசிய கூட்டு நடவடிக்கை கவுன்சில் கூட்டம் வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன் பின்னர் 27ஆம் தேதி அன்று புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து தில்லியில் தேசிய மாநாடு நடைபெறுகிறது. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகளை எதிர்த்தும் 2023ஆம் ஆண்டு முழுவதும் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.