tamilnadu

கொளத்தூர்: வீடுகள் இடிப்பால் மக்கள் பரிதவிப்பு

சென்னை, டிச.25- கொளத்தூர் அவ்வை நகரில் வீடுகள் இடிப்பால் பொதுமக்கள் பரிதவிக்கின்றனர். இப்பிரச்சனையில் முதலமைச்சர் தலை யிட்டு தீர்வு காண வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளை பெறு வதற்கு ரூ. 1.5 லட்சம் முதல் 6.48 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டியிருந்த உத்தரவை ரத்து செய்து, தற்போது தமிழ்நாடு அரசு எளிய முறையில் சுலப தவணை முறையில் மாற்றி உத்தரவிட்டது ஏழை, எளிய உழைப்பாளி மக்களுக்கு பெருமகிழ்ச்சியை தந்துள்ளது.

நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி அதேநேரத்தில் கொளத்தூர், அவ்வை நகரில் ரயில்வே மேம்பாலம் கட்டுவ தற்காக அப்பகுதி மக்கள் தலா 10 அடி வழங்க வேண்டுமென்ற மாநகராட்சியின் கோரிக்கையை ஏற்று நிலம் வழங்க முன்வந்த போதும், பாலம் கட்டும் இடம் போக அவ்வை நகர் பகுதி முழுவதையும் அப்புறப்படுத்தி பூங்கா கட்டப் போவதாக மாநகராட்சி அதிகாரிகள் தன்னிச்சையாக அறிவித்து வீடுகளை இடித்து தரைமட்ட மாக்கியுள்ளனர்.  கல்வியாண்டில் நிலம் கையகப்படுத் தக்கூடாது என்ற நீதிமன்ற வழிகாட்டு தல்களையும் மீறி இத்தகைய நடவ டிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி உழைப் பாளி மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளானது டன், தங்களின் வீடுகளையும், உடைமை களையும் இழந்து கைக்குழந்தைகளுடன் குடியிருப்பதற்கு இடமில்லாமல் பரிதவித்து வருகின்றனர்.  

எனவே தமிழ்நாடு முதலமைச்சர்  இப்பிரச்சனையில் உடனடியாக தலை யிட்டு, கொளத்தூர் அவ்வை நகரில் பாலம் கட்டுவதற்கான நிலம் போக பாக்கி நிலத்தில் உரியவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டுமெனவும், பாலத்திற்காக முழுமை யாக நிலத்தையும், வீட்டையும் இழந்த மக்க ளுக்கு மாற்று நிலம் வழங்கி வீடு கட்டித்தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். மேலும் இத்தகைய அராஜகமான நடவடிக்கையில் ஈடுபட்ட மாநகராட்சி அதி காரிகளை விசாரித்து ,அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், முதலமைச்ச ரையும் கேட்டுக் கொள்கிறது அன்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.