பெரம்பலூர், ஜன.11- பெரம்பலூர் மாவட்டத்தில் நடை பெறும் தொடர் திருட்டை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் என்.செல்ல துரை, ஏ.கலையரசி, ஏ.கே.ராஜேந்தி ரன், எஸ்.அகஸ்டின், ஏ.ரெங்கநா தன், மரு.சி.கருணாகரன், ஒன்றியச் செயலாளர்கள் கே.எம்.சக்திவேல், எஸ்.பாஸ்கரன், பெரம்பலூர் நகரச் செயலாளர் ஏ.இன்பராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள், எழுத்தாளர் எட்வின், கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் நடைபெறும் தொடர் திருட்டை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்தும், கூடுதல் காவல் நிலையம் மற்றும் கூடுதல் காவலர்களை நியமிக்க வும், பெரம்பலூர் நகரத்தில் அனைத்து வார்டுகளிலும், அனைத்து பேரூராட்சி, அனைத்து ஊராட்சி களிலும் மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்திட வேண்டு மென தமிழக அரசு மற்றும் காவல் துறையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.