tamilnadu

நூறு நாள் வேலையில் 5 மாதம் ஊதிய நிலுவை முதல்வரிடம் சிபிஎம் எம்.எல்.ஏ-க்கள் முறையீடு!

நூறு நாள் வேலையில் 5 மாதம் ஊதிய நிலுவை முதல்வரிடம் சிபிஎம் எம்.எல்.ஏ-க்கள் முறையீடு!

சென்னை, ஏப்.27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி.நாகைமாலி, மா.சின்னதுரை ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த னர்.  அந்த மனுவில் தெரிவித்திருந்த தாவது:

73 லட்சம் தொழிலாளர் பாதிப்பு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ்  பணிபுரியும் விவசாயத் தொழிலாளர் களுக்கு தமிழ்நாட்டில் 5 மாதம் ஊதியம் பாக்கி உள்ளது. இதனால் சுமார் 65 லட்சம் குடும்பங்கள், 73 லட்சம் விவ சாய கூலித் தொழிலாளர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ள நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று, விவசாயத் தொழி லாளர்களுக்கு நிலுவையில் உள்ள பாக்கித் தொகையை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடையநேரி குடும்பங்களுக்கு பட்டா  புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை தாலுகா, கவிநாடு கீழ  வட்டம் திருமலைராய சமுத்திரம் ஊராட்சி புல எண்கள் 11/2, 11/7, 13/7,  13/8, 13/9, 13/10, 13/11, 13/12, 13/13, 13/14,  13/15 ஆகிய நிலங்களில் தமிழக அரசால் கடந்த 1968 ஆம் ஆண்டு G.O. MS. No 674 Homo 13.06.1976 4) Letter No-21 (30/73)-RHL 03.08.1976 Government of India Ministry of Suly Rehabilitation-படி சிறி மாவோ பண்டார நாயக - லால்பகதூர் சாஸ்திரி ஒப்பந்த அடிப்படையில் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு புல எண் களில் தமிழக அரசால் கடந்த 1978-80  ஆம் ஆண்டுகளில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.  தாயகம் திரும்பிய தமிழர்கள் இங்கு  யாரும் குடியேறவில்லை. அவர்கள், ஊட்டி, கொடைக்கானல், குன்னூர் போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். நாளடைவில் வீடுகள் சேத மடைந்து விட்டன. பிறகு, அந்த இடத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்ன தாக 200 ஏக்கர் மொத்த பரப்பளவில் குறைந்தது 15 ஏக்கரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த மக்கள் மின்சார வசதி,  சாலை வசதி, குடிநீர் வசதி போன்றவை  இல்லாமல் மிகவும் சிரமத்தைச் சந்தித்த னர். இப்போது சாலை வசதியும், தெரு விளக்கு வசதியும், குடிதண்ணீர் வசதி யும் செய்து கொடுப்பதற்கு ஏற்றுக் கொண்டு படிப்படியாக பணிகள் துவங்கப்பட்டுள்ளன.  மிகவும் வறுமை யான குடும்பங்களைச் சார்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு குடிமனைப் பட்டா வழங்க வேண்டும். மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உடையநேரி பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்திருந்தனர். இம்மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர், நூறு நாள் வேலைத் திட்ட சம்பள பாக்கிக்கு உரிய நட வடிக்கை எடுப்பதாகவும், புதுக் கோட்டை, திருமலைராய சமுத்திரம் உடையநேரியில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப் படும்  என்றும் உறுதி அளித்ததாக சட்ட மன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.