tamilnadu

img

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம், கருத்தரங்கம்

சிபிஎம் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம், கருத்தரங்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இதையொட்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் வியாழனன்று நம்பர் 1 டோல்கேட் பகுதியில் நிதியளிப்பு பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.   கருத்தரங்கிற்கு மாநிலக்குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம் வரவேற்றார். புறநகர் மாவட்டச் செயலாளர் கே.சிவராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சந்திரன், ஆர்.நடராஜன், வி.சிதம்பரம், ஏ.மல்லிகா, ஆர்.ராஜா, என்.கார்த்திகேயன், பி.லெனின், வி.சந்தானம் ஆகியோர் பேசினர். கருத்தரங்கை மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ்.ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசுகையில்: இந்த மாநாடு விவசாயிகள், தொழிலாளர்கள், சாமான்ய மக்களின் பிரச்சனைகளின் தீர்வுக்கான மாநாடு. நாட்டின் வரிப்பணம், வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் அரசு தான் தற்போது நடக்கிறது. கார்ப்பரேட்டுகளின் மிகப்பெரிய ஏஜெண்டாக மோடி உள்ளார். போராடும் மக்களிடம் பேதம் பார்க்கின்றனர். வெறுப்பு அரசியலை உருவாக்குகின்றனர் என்றார்.