tamilnadu

img

மதுரையில் சிபிஎம், வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்

மதுரையில் சிபிஎம், வாலிபர் சங்கத்தினர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர்

சித்திரை திருவிழா

மதுரை, மே 12-  மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. மத்தி 1ஆம் பகுதி சார்பில் தியாகி லீலாவதி நினைவாக நீர் மோர் வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் வை. ஜென்னியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  போக்குவரத்து இடைக்கமிட்டி சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், இடைக்கமிட்டி செயலாளர் எஸ்.அழகர்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மேற்கு 1 ஆம் பகுதி பெத்தானியாபுரம் நாகு நகர் கிளை சார்பாக கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தோழர் என்.நன்மாறன் நினைவு நீர் மோர் அமைக்கப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் பி.வீரமணி, மாவட்டக் குழு உறுப்பினர் கு.கணேசன், பகுதிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினர். வடக்கு 1ஆம் பகுதி சார்பில் ஆழ்வார்புரம் கிளைச் செயலாளர் நமச்சிவாயம் தலைமையில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் டி.குமரவேல் எம்.சி., மற்றும் கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாலிபர் சங்க அரசரடி பகுதிக் குழு சார்பில் பெத்தானியபுரம் தூக்கு மேடை தியாகி பாலு படிப்பகம் அருகில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. பகுதி குழு நிர்வாகிகள் செந்தில், ரவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.