tamilnadu

அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய அமைச்சர் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கொரோனா

புதுதில்லி, ஜன.4- தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவா லுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.  அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள தாகவும், லேசான அறிகுறிகளே இருப்ப தாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. லேசான அறிகுறிகளே உள்ளன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த ஒரு சில  நாள் களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனி மைப்படுத்திக் கொள்வதும், கொரோனா பரி சோதனை மேற்கொள்வதும் நல்லது என்று தெரிவித்துள்ளார்.

வீட்டுத் தனிமையில்  பிரியங்கா காந்தி

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீட்டுத் தனிமையில் உள்ள னர். அவரது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தாக்கம் இருந்த தன் காரணமாக தற்போது அவர் தனிமை யில் உள்ளார். 

ஒன்றிய அமைச்சர், எம்.பி.க்கு பாதிப்பு

ஒன்றிய அமைச்சர் மகேந்திரநாத் பாண்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. அவருக்கு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தில்லியில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் திவாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

94 மருத்துவர்களுக்கு கொரோனா

மேற்கு வங்கத்தின் கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 70 மருத்துவர்கள், காளிகாட்  சித்தரஞ்சன் சேவா சதன் மருத்துவமனையில் பணியாற்றும் 24 பயிற்சி மருத்துவர்கள், மண்டல  கண் மருத்துவக் கழகத்தில் பணி யாற்றும் 12 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.