tamilnadu

img

தொற்றுபரவலை தடுக்க மீண்டும் கொரோனா பரிசோதனை

தமிழக அரசு அறிவிப்பு  சென்னை, டிச.22- தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்  தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்  பாடு தொடர்பாக  தமிழ்நாடு முதல மைச்சர்  மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் வியாழ னன்று (டிச.22) நடைபெற்றது.  இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம்  மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை  முதன்மைச் செயலாளர்  எடுத்துரைத் தார். சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்  தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்  கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடு களில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சுகாதாரச் செயலாளர் சுற்றறிக்கையின்படி,  கோவிட் தொற்று எண்ணிக்கையை கண்கா ணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைபடுத்துதல் பரி சோதனை செய்யவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.   தற்போது தமிழ்நாட்டில் உள்ள கொரோனா தொற்று எக்ஸ்இபி.பி வகையாகும்.  இது பிஏ-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும்.   சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் பிஏ-7 வகையான கொரோனா தொற்று பிஏ-5-ன் உள் வகையாகும். இத்தகைய பிஏ-5 தொற்று தமிழ்நாட்டில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதி கமாக கண்டறியப்பட்ட இந்த தொற்  றின் வகை தொடர்ந்து கண்காணிக் கப்பட்டு வருவதாக இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போது மான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதி கள் கூடுதலாக்கப்படும் எனவும் சுகா  தாரத்துறை செயலர் தெரிவித்தார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறு வனத்தின் (ஐசிஎம்ஆர்)  வழிகாட்டு தல்படி கோவிட் பரிசோதனை செய்ய வும், கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழுமரபணு வரிசை படுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்கா ணிக்கவும் மேலும் இன்புளூயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரை யீரல் தொற்று ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்து வத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட் டுள்ளனர்.

கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி குறிப் பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், சமூக இடைவெளியினை கடைப் பிடிப்பது, நோய்த்தொற்று அறிகுறி கள் தென்பட்டால் உடனே அருகி லுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனை யின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுறுத்தினார். இதற்கு தேவையான நடவடிக்கை களை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். சர்வதேச விமானநிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணி கள் எவருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்  தால் அவர்களுக்கு நிலையான வழி காட்டு நெறிமுறைகளின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தி னார். பொதுமக்கள் தேவையற்ற அச்  சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்  களை பாதுகாக்க அரசு தயார் நிலை யில் உள்ளது என்றும் முதல்வர் தெரி வித்தார்.  இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்  வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணி யன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடு தல் தலைமைச் செயலாளர் க. பணீந்  திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்  செந்தில் குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். உமா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.