தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஏப்.24 அன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான அரவிந்த சாமியை பட்டம் வாங்கவிடாமல் பாதுகாப்பு என்ற பெயரில், காவல்துறை கைது செய்து, மனித உரிமை மீறலில் ஈடுபட்டது. இதனை கண்டித்து சங்கத்தின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் செவ்வாயன்று (ஏப்.25) காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து டிஜிபி அலுவலகத்தில் சங்கத் தலைவர்கள் மனு அளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், அருண், மிருதுளா, தமிழ் (மத்தியசென்னை), ஆனந்த், பாரதி, புகழ்ச்செல்வி (தென்சென்னை), நித்திஷ், குணா (வடசென்னை) உள்ளிட்டோர் பேசினர்.