tamilnadu

img

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா திடீர் மரணம்

ஈரோடு, ஜன. 4- ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வே.ரா, மாரடைப்பால் கால மானார். அவருக்கு வயது 45. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி யில் இருந்து பேரவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் திருமகன் ஈ.வெ.ரா. காங்கிரஸ் கட்சி யின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திரு மகன் ஈவெரா  தமிழக காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுச் செயலாளராகவும் செயல் பட்டு வந்தார். இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் புதனன்று மதியம்  திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை (கேஎம்சிஎச்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை யடுத்து அவரது உடல் ஈரோடு இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.  மகனின் மறைவுச் செய்தி  அறிந்து, சென்னையில் இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டிற்கு விரைந்தார். திருமகன் எம்எல்ஏவின் மறைவுச் செய்தியறிந்து, காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் திருமகன். 2014ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை  அக்கட்சியின் சமூக ஊடக பிரிவு தலைவராக இருந்தார். 2016-ம் ஆண்டு முதல் அகில  இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பின ராகவும், 2021 முதல் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். 

சிபிஎம்  இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலை வரும், முன்னாள் மத்திய அமைச்சரு மான   ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர் களின் மகனும், ஈரோடு கிழக்கு சட்ட மன்ற உறுப்பினரு மான திருமகன் ஈவெராவின் அகால மரணம் பெரும் அதிர்ச்சியையும், வேதனை யையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், தன் மகனை இழந்து வாடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவ னுக்கும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சியின் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.