tamilnadu

img

தோழர்.வி.என்.ராகவன் நினைவு சிறப்பு மலர் வெளியீடு

சென்னை, ஆக. 1 - அஞ்சல் துறை ஊழி யர் இயக்கப் போராளியாக வும், தீக்கதிர் சென்னை பதிப்பு ஆசிரியர் குழுவி லும் தோழர்.வி.என்.ராகவன்  பணியாற்றினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி திங்க ளன்று (ஜூலை 31) கேரள  சமாஜம் பள்ளி வளாகத் தில், ‘உளத்தில், களத்தில், எழுத்தில் நிலைத்த மார்க்சிய காதலர் வி.என்.ராகவன்’ எனும் சிறப்பு மலர்  வெளியீடு நிகழ்வு நடை பெற்றது. இந்த விழாவில் நூலை தீக்கதிர் மேனாள் ஆசிரியர் வே.மீனாட்சிசுந்தரம் வெளியிட முதல் பிரதியை தீக்கதிர் முன்னாள் பொது  மேலாளர் சி.கல்யாண சுந்தரம் பெற்றுக் கொண்டார். வே. மீனாட்சிசுந்தரம் பேசுகையில், “மார்க்சிய விஞ்ஞானத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்பித்து அரசியல் உணர்வை ஊட்டியவர்கள் நடுத்தர வர்க்க தொழிற்சங்கத் தலைவர்கள். அத்தகைய வர்களில் வி.என்.ராகவன்,  ஏ.கே.வீரராகவன் போன் றோரின் பங்கு முக்கியமா னது” என்றார். சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா பேசுகையில், “ஆண்டு தோறும் ஜூலை 18 ஆம் தேதி விஎன்ஆர் நினைவு நாளில் சொற்பொழிவு நடத்தப்படும்”என்றார். இந்த நிகழ்விற்கு ‘உழைக்கும் வர்க்கம்’ இதழின் மேனாள் ஆசிரியர் ெஜ.ரங்கநாதன் தலைமை தாங்கினார். பேரா.வெங்க டேஷ் ஆத்ரேயா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச்  செயலாளர் ஆர்.பி.சுரேஷ், மூத்த தலைவர்கள் சி.பி.ரவிசங்கர், அலைகள் பதிக்கம் சார்பில் முனைவர் இளங்கோ, மருத்துவர் வர்ஷா, மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் உள்ளிட் டோர் பேசினர்.