தோழர் சாவித்திரி உடலுக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் ப.சுந்தரராசன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை, ஜன.17- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் மற்றும் சிபிஎம் மூத்த தலைவரான தோழர் ஆர். சாவித்திரியின் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: வேலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவரும், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவ ராகவும், மத்தியக்குழு உறுப் பினராகவும் பணியாற்றியவ ருமான தோழர் ஆர். சாவித்திரி உடல் நலக்குறைவால் ஜனவரி 16 அன்று காலமானார். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநிலச் செயற் குழு தனது ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக்கொள்கி றது.
தோழர் ஆர். சாவித்திரி அஞ்சல் துறையில் பணி யாற்றிய போது தொழிலாளர் நலன்களுக்காக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத் துக் கொண்டு வேலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கம், மாதர் சங்கத்தை கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டவர். தான் குடியிருந்த வீட்டை கட்சிக்கு தானமாக எழுதிக் கொடுத்தவர். அவரது மறைவு கட்சிக்கும், மாதர் இயக்கத் திற்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும். தோழர் ஆர். சாவித்திரி மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறு தலையும் தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.