tamilnadu

img

தோழர் கே.தேவராஜ் படத்திறப்பு, குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கல்

மதுரை, அக் 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர்.கே. தேவராஜ் படத்திறப்பு, குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை உசிலம்பட்டியில் நடைபெற்றது. மறைந்த கே.தேவராஜ் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர், மாவட்டத் தலைவர், கட்சியின் உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் என பல்வேறு பொறுப்பு களை ஏற்று பணியாற்றினார். குறிப் பாக உசிலம்பட்டி தாலுகாவில் கட்சியை வளர்ப்பதிலும், மதுரை மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கிளைகளைக் கட்டுவதிலும் அவரது பங்கு மகத் தானது. குறிப்பாக மாதம் தோறும் நடைபெறும் மதுரை மாவட்ட விவ சாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகளின் பிரச்சனைகள், கோரிக்கைகளை முன்வைப்பதில் தனி முத்திரை பதித்தவர். அவரது கருத்துக்களை ஏற்று மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மக் கள், விவசாயிகளின் தலைவராக விளங்கிய அவர் கடந்த செப்டம்பர் 2- ஆம் தேதி சிவகாசியில் கால மானார். அவரது உருவப்படத்திறப்பு விழா, குடும்பப் பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்வு உசிலம்பட்டி யில் சனிக்கிழமை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் த.செல்லக் கண்ணு தலைமையில் நடை பெற்றது. கே.தேவராஜ் படத்தை மாநிலச்செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் திறந்துவைத்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராம கிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செய லாளர் இரா.விஜயராஜன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய். மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் வி.பி.முருகன் செ.முத்துராணி, உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் பெ.ராமர், சேடப்பட்டி ஒன்றியச் செயலாளர் என்.ஜெயபால், வழக்கறிஞர் செல்வராஜ், ஆகியோர் கே.தேவ ராஜின் பணிகள் குறித்து பாராட்டி புகழஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குடும்பப் பாது காப்பு நிதி ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் வழங்கப்பட்டது. அவரது மனைவி வளர்மதி, மகன் ஜூலியஸ்பியூசிக், மகள் ஜென்னி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ஏ.விஜயமுரு கன், மாநிலப் பொருளாளர் கே.பி.பெருமாள், கட்சியின் மாநகர், புற நகர் மாவட்டச் செயற்குழு, மாவட் டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டிச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்ட னர்.