உயிர்ப் பன்மயத்தன்மையை காக்க உயிரியல் பன்முகத்தன்மை ‘உச்சி மாநாடு’ கொலம்பியா காலி (cali) நகரில் ஒரு சில சாதனைகளை படைத்திருந்தாலும் ஏமாற்றங் களுடனும் முடிவெடுக்க முடியாத குழப்பத்திலும் முடிந்துள்ளது. கடந்த 2022 கனடாவில் நடைபெற்ற மாநாட்டில் வளர்ந்த நாடுகள் கொடுத்த வாக்குறுதிகளின் அடிப்படையில் வளரும் நாடுகளுக்கு நிதி வழங்கவில்லை என்ற கடும் கோபத்துடன் வளரும் நாடுகள் இம்மாநாட்டில் பங்கேற்றன.
முடிவுகள் எட்டப்படாமல் முடிந்த மாநாடு
நவம்பர் 1 அன்று மாலையில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட இம்மாநாடு உடன்பாடுகள் எட்டப்படாததால் கூடுதலாக 12 மணி நேரப் பேச்சுவார்த்தைகளுக்கு பின் மறுநாள் காலையில் குழப்பத்துடன் முடிந்தது. இயற்கையை பாதுகாக்க நாடுகள் நிதி ஒதுக்குவது பற்றிய முக்கிய பிரச்சனைகளுக்கு முடிவு காண்பதில், பத்தாண்டு இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது பற்றி தீர்மானிப்பதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விமானங்களை பிடிக்க பல நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைகளில் இருந்து முன்கூட்டியே சென்றனர். இதன் விளைவாக தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு தேவை யான பெரும்பான்மை இல்லாமல் போனது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இது பற்றி விவாதிக்க இடைக் கால கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருத்தத்தை வெளிப்படுத்திய பிரதிநிதிகள்
“பல வளரும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விவாதம் நீடித்த போது விமான பயணத் திட்டத்தை மாற்றுவதற்குரிய போதிய நிதி வசதி இல்லை. கெடுவாய்ப்பாக பசுபிக் பகுதியில் இருந்து மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே ஒரு நாடு பிஜி (Fiji) மட்டுமே. பத்து பேர் கொண்ட குழுவாக நாங்கள் வந்தோம். ஆனால் இப்போது நான் மட்டுமே இருக்கிறேன். விமானப் பயணத்தை எங்களால் மாற்றமுடியாது. ஏனென்றால் அதற்கு உரிய நிதிவசதி எங்களிடம் இல்லை” என்று பிஜி பிரதிநிதி மிஷெல் பலக்கெனெசியா (Michelle Baleikanacea) வருத்தத்தை தெரிவித்தார்.
உறுதியற்ற ஆலோசனையுடன் பங்கேற்ற நாடுகள்
ஒவ்வொரு நாடும் டிஜிட்டல் மரபணு வரிசை தகவல் (Digital Sequence Information DSI) என்று அழைக்கப்படும் தரவுகள் மூலம் இயற்கை யில் இருந்து கிடைக்கும் பொருட்களுக்கு வரி விதிப்பது, பழங்குடியின மக்களின் பிரதிநிதி களை ஐ.நா.வின் அதிகாரப்பூர்வ உயிர்ப் பன்மயத்தன்மை முடிவெடுக்கும் செயல்முறை குழுவில் கலந்துகொள்ள அனுமதிப்பது உட்பட ஒரு சில நல்ல முடிவுகளை எடுத்தன. இந்த முடிவுகள் வரவேற்கத்தக்கவை என்றா லும் இயற்கையை பாதுகாக்க தேவையான அவ சர உணர்வுடன் ஐரோப்பிய ஒன்றியம், கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், இங்கிலாந்து போன்ற நாடுகளின் தலைவர்கள் உரிய அவ சரத்தை உணர்ந்து செயல்படவில்லை. பல நாடு கள் முந்தைய கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகளை அடைய உதவும் தேசிய திட்டங்கள், பாதுகாக்கப்பட்ட இடங்கள் பற்றி எந்த ஒரு உறுதி யான ஆலோசனையுடனும் வரவில்லை. செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு “ஐ.நா. உயிர்ப் பன்மயத்தன்மைப் பிரிவு தலைமைச் செயல் அலுவலர் சரிவர செயல்பட வில்லை” என்று பொது நல முன்னேற்றத்திற்கான சிந்தனைக் குழுவின் (thinktank) இயக்குனர் ஆச்கர் சோரியா (Oscar Soria) குற்றம்சாட்டினார். ஐ.நா. அதிகாரிகளும் பல நாடுகளின் தலைவர் களும் உரிய குறிக்கோளுடன் இம்மாநாட்டில் கலந்துகொள்ள வரவில்லை என்று இயற்கை பாதுகாப்பு பிரச்சாரக்குழுவின் இயக்குனர் ப்ரெயன் ஓடானல் (Brian O’Donnell) குற்றம் சாட்டியுள்ளார். கொலம்பியாவில் நடந்து முடிந்துள்ள இம்மாநாடு நிதி ஒதுக்கீடு பற்றி எந்த ஒரு முடிவை யும் எடுக்காமல் முடிந்திருப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என உலகளா விய தாவர விலங்கு வளப் பாதுகாப்பு கொள்கை வகுக்கும் அமைப்பின் இயக்குனர் கேத்தரின் வெல்லர் (Catherine Weller) தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையை மீட்டெடுக்க ஆண்டுதோறும் 700 பில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 590 லட்சம் கோடி ரூபாய் ) தேவை என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான நிதி எங்கிருந்து வரும்?
அமலுக்கு வராத நிதி ஒதுக்கீடு முறை
சில ஆண்டுகளுக்கு முன் கனடாவில் நடை பெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் நிதி ஒதுக்கீடு பற்றி ஒப்புக்கொள்ளப்பட்ட தீர்மானம் இன்னும் காகிதங்களிலேயே உள்ளது. நடைமுறையில் செயல்படுத்தப்படவில்லை. இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருட்களின் வணிக பயன்பாட்டி னால் கிடைக்கும் லாபங்களை வளரும் நாடு களுடன் பங்கிடுவது பற்றிய உடன்படிக்கை வளர்ந்த நாடுகளால் செயல்படுத்தப்படவில்லை. மருந்துகள் உற்பத்தி, பல்வேறு பொருட்கள் தயா ரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கும் இத்தகவல்கள் ஏழை/ வளரும் நாடுகளில் இருந்தே கிடைக்கின்றன. ஆனால் இதன் மூலம் பெறப்படும் கோடிக் கணக்கான டாலர் லாபம் ஏழை/ வளரும் நாடு களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை. இந்த நிதி உரிய முறையில் வழங்கப்பட்டால் இயற்கையை காக்க ஆண்டுதோறும் 100 கோடிக்கும் அதிக மான நிதி கிடைக்கும். இதில் பாதி பழங்குடியின சமூ கங்களுக்கு போய்ச்சேரும். இருபது ஆண்டு களுக்கும் மேலாக பழங்குடி மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு உயிர்ப் பன்முகத்தன்மை கூட்டங்களில் கலந்துகொள்ளும் அதிகாரப்பூர்வ இடம் வழங்கப்படவில்லை.
ஏமாற்றத்தை பரிசளித்த முடிவு
பழங்குடியின மக்களின் பிரதிநிதிகள் ஐ.நா. பன்முகத்தன்மை பேச்சுவார்த்தைகளில் நிரந்தரக் குழுவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர் என்று சர்வ தேச உயிர்ப் பன்மயத்தன்மைக்கான பழங்குடி மக்கள் அமைப்பின் (IIFB) முன்னணி பிரதிநிதி ஜிங் காப்பஸ் (Jing” Corpuz) குறிப்பிட்டுள்ளார். மாநாட்டில் உரிய முன்னேற்றம் ஏற்படாதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது என்று உலகளாவிய இயற்கை வள நிதியத்தின் பிரதிநிதி பெர்னடெட் ஃபிஷ்லர் ஹூப்பரும் (Bernadette Fischler Hooper) இம்மாநாடு முடிவுகளை குறித்தான தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். பல வளரும் நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தின் கடைசி மணித்துளிகளில் உயிர்ப் பன்மயத்தன்மையை பாதுகாக்க தங்களிடம் போதுமான நிதி இல்லை” என்று கடும் அதிருப்தி யை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இம்மாநாடு “போதிய நிதியையும் வழங்கவில்லை. நம்பிக்கை யையும் கொடுக்கவில்லை” என்று சியரோ லியான் நாட்டின் சூழல் அமைச்சர் ஜீவா அப்துல்லாய் (Jiwoh Abdulai) தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். மாநாட்டின் கடைசி நாட்களில் பிரிவினை ஏற்படும் விஷயங்களை பேசுவதற்கே அதிக நேரம் செலவிடப்பட்டது. சீரழியும் இயற்கையை பாதுகாக்க என்று கூடிய இந்த உச்சி மாநாடு உலகுக்கு ஏமாற்றங்களையே பரிசாக அளித்தது என்று சூழல் போராளிகள் கருதுகின்றனர்.