சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு
சென்னை, ஜன. 11 - மொழி வளர்ச்சிக்கான கம்யூ னிஸ்ட்டுகளின் பங்களிப்பு தொடரும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கூறினார். பாரதி புத்தகாலயத்தின் முப்பெரும் விழா வெள்ளியன்று (ஜன. 10) சென்னை புத்தகக்காட்சி வளா கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமுஎகச மூத்த தலைவர் ச.தமிழ்ச்செல் வன் எழுதிய, ‘ஒரு பண்பாட்டு அரசிய லின் பயணம் - ஆய்வாளர் ஆர்.பால கிருஷ்ணனின் முன்னெடுப்புகள்-அறி முகம்’ நூல் வெளியீடு விழா பத்திரிகை யாளர் ஆர்.விஜயசங்கர் தலைமை யில் நடைபெற்றது. நூலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட, தமுஎகச மாநிலப் பொரு ளாளர் சைதை ஜெ, இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தமிழ் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். சிந்து வெளி ஆய்வாளர் ஆர்.பால கிருஷ்ணன், திரைக்கலைஞர் ரோகிணி ஆகியோர் உரையாற்றினர். ச.தமிழ்ச்செல்வன் ஏற்புரையாற்றி னார். எழுத்தாளர் கமலாலயன் நன்றி கூறினார்
‘புக்டே’ எழுத்தாளர்களுக்குப் பாராட்டு
பாரதி புத்தகாலயத்தின் இணைய தளமான புக்டே-விற்கு பங்களிப்பு செய்து வரும் படைப்பாளிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், எழுத்தாளர்கள் அ.குமரேசன், அ. பாக்கியம், ந.வெ.அருள், கி.ரமேஷ் ஆகியோர் பாராட்டி நினைவு பரிசு களை வழங்கினர். ஒருங்குறி எழுத்துரு வெளியீடு பள்ளி மாணவர்களின் கையெ ழுத்தை அடிப்படையாக கொண்ட தமிழ் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்து ருக்கள் வெளியிடும் நிகழ்வு எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் தலைமையில் நடைபெற்றது. எழுத்து ருக்களை சிபிஎம் மாநிலச் செயலா ளர் பெ.சண்முகம் வெளியிட, ஊடக வியலாளர்கள் நூருல்லா, தியாகச் செம்மல், இரா.காளீஸ்வரன், பொன். தனசேகரன், அ. விஜயகுமார் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். பெருமாள் ராஜ் நன்றி கூறினார்.
கம்யூனிஸ்டுகள் குறித்து தவறான கருத்து
எழுத்துருக்களுக்கு கையெழுத்துக் களை வழங்கிய குழந்தைகளை கவுரவித்து பேசிய பெ.சண்முகம், “ஒருங்குறி எழுத்துருக்களை வெளி யிட்டு தமிழ்ச் சமூகத்திற்கு பெரும் சேவையை பாரதி புத்தகாலயம் செய்துள்ளது. தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ்நாடு போன்றவற்றில் கம்யூ னிஸ்ட்டுகளின் பங்களிப்பின் தொடர்ச்சி யாக பாரதி புத்தகாலயம் இந்த எழுத்துருக்களை வெளியிட்டுள்ளது” என்றார். “தமிழ் வளர்ச்சி பற்றி கம்யூ னிஸ்ட்டுகள் கவலைப்படுவதில்லை என்ற பொதுவான கருத்து சமூ கத்தில் உள்ளது. தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு காரணமே கம்யூ னிஸ்ட்டுகள்தான். இதற்கான தீர்மா னத்தை நாடாளுமன்றத்தில் பி.ராம மூர்த்தி கொண்டுவர, பூபேஷ் குப்தா முன்மொழிய, அண்ணா வழிமொழிந்தார். மொழிவழி மாநிலங்கள் உருவாக மகத்தான போராட்டத்தை முன்னெடுத் தவர்கள் ப.ஜீவானந்தம், எம்.ஆர். வெங்கட்ராமன் போன்ற கம்யூனிடுகள் தான். காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி சிறைக்கு சென்றனர். தமிழ் நாடு பெயர்சூட்ட உண்ணாவிரத மிருந்து உயிர்விட்ட காங்கிரஸ்கார ரான தியாகி சங்கரலிங்கனார், தனது உடலை கம்யூனிஸ்ட்டுகளிடம் ஒப்படைக்க கோரினார். அதன்படி அவரது உடலை கம்யூனிஸ்ட்டுகள் அடக்கம் செய்தனர். தமிழ் மொழி, மாநில வளர்ச்சி யில் தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட்டுகள் பங்களிப்பு செய்து வருகின்றனர். இது இயல்பான பணி என்பதாக கருதி பேசு வதில்லை; மற்றவர்களைப் போல தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை” என்றும் அவர் கூறினார். எழுத்துச்சீர்திருத்தம் தவிர்க்க முடியாத ஒன்று. காலத்திற்கேற்ப தொடர்ந்து சீர்த்திருத்தம் செய்யும் போதுதான் மொழி வளர்ச்சியடையும்; உயிரோட்டமாக இருக்கும். பாரதி புத்த காலயம் வெளியிட்டுள்ள ஒருங்குறிகள் தமிழ்மொழியை வளர்ச்சியை நோக்கிச் செல்லும். மொழி வளர்ச்சிக்கான கம்யூ னிஸ்ட்டுகளின் பங்களிப்பு தொடரும்” என்றும் பெ.சண்முகம் கூறினார். புத்தகக் காடு ஆயிஷா நடராசனின் ‘அசிமவ்வின் தோழர்கள்” ராமபுரம் எஸ்ஆர்எம் கல்லூரியை சேர்ந்த தமிழ் மன்றம் மாணவர்கள் அறிமுகம் செய்து பேசினர். இந்நிகழ்வை முனைவர் கோ.கணேஷ், க.நாகராஜன் ஆகி யோர் ஒருங்கிணைத்தனர்.