அமைப்புசாரா நலவாரியத்தை முழுமையாக செயல்படுத்த
வலியுறுத்தி மதுரையில் சிஐடியு பெருந்திரல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழகத்தில் 1994ம் ஆண்டு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் 1999ம் ஆண்டு முறைசாரா நலவாரியமும் அரசால் ஏற்படுத்தப்பட்டது. 2020ம் ஆண்டு முழுமையாக ஆன்லைன் மூலம் பணியை துவக்கி இதுவரை 75 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களை பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக 74 லட்சம் பதிவு செய்த தரவுகள் அழிந்து விட்டதாக தமிழக அரசு கூறுவது ஏற்கத்தக்கதாக இல்லை. இந்நிலையில் கட்டுமானம் உள்ளிட்ட நலவாரிய பயனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தமிழக அரசு - முழு அளவிலான தரவுகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் சர்வர் செயல்படுவதில் தொடர் பிரச்சனை ஏற்படுவதால் ஆப் லைனில் பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும்.
கட்டுமான நலவாரியத்தில் பென்சன் ரூ. 2000/- உயர்த்திய முடிவை முதல் தவணையாக அரசு அமுல்படுத்த வேண்டும்.
பென்சன் கேட்டு பதிந்த மாதத்திலிருந்து தாமதமில்லாமல் பென்சன் வழங்க வேண்டும். பென்சன் தொகையை அனைவருக்கும் ரூ.3000/- மாக உயர்த்த வேண்டும். முத்தரப்பு குழுக்களை உடனடியாக அமைத்திடு. திருமண உதவித் தொகையை அனைத்து வாரிய தொழிலாளர்களுக்கும் ரூ. 50 ஆயிரமாக உயர்த வேண்டும் என்று மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர். தெய்வராஜ் தலைமையில் நடைபெற்றது. புறநகர் மாவட்டத் தலைவர் கே. அரவிந்தன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார், மாநகர் மாவட்ட பொருளாளர் ஜே. லூர்துரூபி. கட்டுமான தொழிலாளர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் மணி கிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். நலவாரியத்தில் நடைபெறும் குழப்பங்களை கலைந்திட வேண்டும், ஓய்வூதியம் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினார்கள்.