tamilnadu

img

பட்டாசு ஆலை விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் அனைத்து கல்விச் செலவையும் அரசே ஏற்கும்!

விருதுநகர், நவ.10 - பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் அனைத்து  கல்விச் செலவையும் அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். விருதுநகரில் நடைபெற்ற விழாவில், ரூ.77.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய  ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ. 21.36 கோடி செலவில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 34 பணிகளை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக் கிழமை திறந்து வைத்தார்.  விருதுநகர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர்  அலுவலகத்தைத் திறந்து வைத்த முதல்வர், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலனை இருக்கையில் அமர வைத்தார். பிறகு ஆட்சியர்  அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்த முதல்வர், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, பட்டம்புதூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடியே 21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:   விருதுநகர் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருபவர் தியாகி சங்கரலிங்க னார். அவர், மெட்ராஸ் ஸ்டேட் என்று அழைக்கப் பட்டதை  தமிழ்நாடு“ எனப் பெயர் சூட்டக்கோரி   உண்ணா நோன்பிருந்து உயிர்த் தியாகம்  செய்தவர். நாம், தமிழ்நாடு என பெருமை யுடன் சொல்ல  சங்கரலிங்கனாரும், அண்ணா வும் காரணமாக இருந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3  ஆண்டில் ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டு உள்ளன. 1,286 ஊரகப் பகுதியில் தாமிர பரணி கூட்டுக் குடிநீர் திட்டம், இருக்கன்குடி மாரியம்மன்  திருக்கோயில்  பணிகள் நடை பெற்று வருகின்றன. ஒருங்கிணைந்த ஆயத்த  ஆடைகள் பூங்கா, அயன் கொல்லன் கொண்டானில் புதிய தொழிற்பேட்டை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை மாவட்டத் தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தும் பணிகள், சிவகாசியில் அறிவு சார் மையம்,  வணிக வளாகம், பூங்கா, புதிய  மாநகராட்சி அலுவலகக் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சி களுக்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சிப் பகுதிகளில், 257 சாலைப் பணிகள் முடிக்கப்பட்டு, எஞ்சிய 37  பணிகள் நடைபெற்று வருகின்றன.  திருவில்லிப்புத்தூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. விருதுநகர்  மாவட்டத்தில் 95 சதவீதத்திற்கு மேல் பிளஸ் 2  படித்த மாணவர்கள் உயர் கல்வியில் சேர்க்கப் பட்டுள்ளனர். இது  நமக்கு பெருமையாகும்.  

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்

பட்டாசு தொழிலாளர்களை கள ஆய்வில்  சந்தித்த போது, சில கோரிக்கைகளை முன்  வைத்தனர்.  எனவே, பட்டாசு ஆலை விபத்து களில் உயிரிழக்கும் தொழிலாளர்களது குழந் தைகளின்  உயர்கல்வி வரையிலான அனைத்துக் கல்விச் செலவுகளையும் அரசே  ஏற்கும். இதற்கென  விருதுநகர் மாவட்ட  ஆட்சியரின்கீழ், தனி நிதியம் உருவாக்கப்படும். இதற்காக முதற்கட்டமாக ரூ. 5 கோடியை அரசு வழங்கும். மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் உள்ள கண்மாய்கள், தடுப்பணைகள் ரூ.17 கோடி யில் மேம்படுத்தப்படும். காரியாப்பட்டி தெற்காற்றின் குறுக்கே ரூ.21 கோடியில் புதிய  அணை கட்டப்படும். அத்துடன், விருதுநகரில்  உள்ள கௌசிகா ஆறு,  அருப்புக்கோட்டை, கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் ரூ.41 கோடியில் சீரமைக்கப்படும். வத்திராயிருப்பு, இராஜபாளையம் பகுதி களில் 22 கண்மாய்களை ரூ.18.10 கோடியி லும், கலங்காபேரி, வெம்பக்கோட்டை, ஆணைக்குட்டம், கோல்வார்பட்டி அணைகள் ரூ.23.30 கோடியிலும் மேம்படுத்தப்படும். அருப்புக்கோட்டை அருகே 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடியில் புதிய சிப்காட்  தொழில் வளாகம் அமைக்கப்படும். இதனால்,  10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம்,   விருதுநகர் நகராட்சியில் ரூ.24.50 கோடியில் சாலை, மழைநீர் வடிகால் வசதிகள் மேம்படுத்தப் படும். சாத்தூர் நகராட்சியில் ரூ.2 கோடியில் பூங்கா, சிறு பாலம் அமைக்கப்படும். இராஜ பாளையம் நகராட்சியில், ரூ.13 கோடியில் மழைநீர் வடிகால், ரூ.5 கோடியில் கோடை  நீர்த்தேக்கம் மேம்படுத்தப்படும். அருப்புக் கோட்டையில் ரூ.3 கோடியில் மழைநீர் வடிகால் வசதி,  ரூ.1.50 கோடியில் பூங்கா அமைக்கப் படும். விருதுநகர் நகராட்சி எல்லைக்குள் வரக் கூடிய நெடுஞ்சாலைகள் ரூ.25 கோடி,   அருப்புக்கோட்டை நகராட்சி எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைகள் ரூ.10.50 கோடியி லும், காரியாபட்டி எல்லைக்குள் உள்ள நெடுஞ் சாலைகள் ரூ.12 கோடியிலும் மேம்படுத்தப் படும்.   திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக, கழி வறைகள், வாகன நிறுத்துமிடம் ரூ. 2.10 கோடி யில் அமைக்கப்படும். வத்திராயிருப்பு, பிள வக்கல் அணைப் பகுதியில், ரூ.10 கோடியில்  பூங்கா மேம்பாட்டு பணிகளும், சாஸ்தா கோவில் அருவி பகுதியில் ரூ.1.70 கோடியில்  மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

40 ஆயிரம் பேருக்கு பட்டா 

இந்த திட்ட அறிவிப்புகளுக்கான அரசா ணையை விரைந்து பெற்று, பணிகளை தொடங்குவதற்கு மாவட்ட அமைச்சர்கள், ஆட்சியர் கவனம் செலுத்த வேண்டும். நத்தம்  என்று வகைப்படுத்தப்பட்ட நிலங்கள் போதிய அளவு இல்லை. எனவே, ஆட்சேப னையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை  நத்த மாக வகை மாற்றம் செய்து,  இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க உத்தரவிட்டேன். தமிழ கத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகள வில் 40 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கியிருப் பது சிறப்பாகும். இதற்காக துறை அமைச்சர்,  துறைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டுகிறேன். கடந்த 3 ஆண்டுகளில் 10,03,874 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள், இ-பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

எடப்பாடி பழனிச்சாமி கூறுவது பொய்

இது பற்றியெல்லாம் எதுவும் தெரியாமல் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது, மக்கள் நலனைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. அவர், மக்கள் நலத் திட்டங்களுக்கு மூலதனச் செலவுகளை நான் மேற்கொள்ளாமல், கலை ஞர் பெயரில் மக்களுக்குப் பயன்படாத திட்டங் களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கு வதாக கூறுகிறார்.  இது மிகப் பெரிய பொய்யா கும். எதை நீங்கள் மக்களுக்குப் பயன்படாத திட்டம் எனக் கூறுகிறீர்கள். வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பயன்படாத திட்டமா?. கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்து வமனையால் பயனில்லையா? கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பயன் படாத திட்டமா?. தமிழக வரலாற்றில் கலைஞர்  தவிர்க்க முடியாத அடையாளம். ஒரு சிறந்த  தலைவரின் பெயரில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவதை எதிர்கட்சித் தலைவர் ஆண வத்துடன் விமர்சிப்பதால் தொடர் தோல்வி களைச் சந்திக்கிறார். திமுக ஆட்சியின் புகழ் வெளிச்சத்தில் புது வெளிச்சம் தேடும் புற்றீசல்கள் காணாமல் போகும்.  நான் எப்போதும் தமிழக மக்களின்  வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு முதல்வர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி.கணேசன், மக்களவை  உறுப்பினர்கள் மாணிக்கம்தாகூர் (விருதுநகர்),  ராணிஸ்ரீகுமார் (தென்காசி), நவாஸ்கனி (இராமநாதபுரம்), சட்டப்பேரவை உறுப்பி னர்கள் சீனிவாசன் (விருதுநகர்), தங்கப் பாண்டியன் (ராஜபாளையம்), ரகுராமன் (சாத் தூர்), வருவாய்த்துறை முதன்மைச் செயலர்  அமுதா, வருவாய்த்துறை நிர்வாக ஆணையர்  ராஜேஷ்லக்காணி உள்ளிட்ட அரசு உயர் அதி காரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வரின் இரு நாள்கள் கள ஆய்வையொட்டி தமிழக காவல்துறை கூடுதல் இயக்குநர் டேவிட்சன் ஆசீர்வாதம் தலைமையில், தென் மண்டல காவல்துறை தலைவர் பிரேம்ஆனந்த்சின்கா, 8 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 5 ஆயிரம்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.