சென்னை, நவ.20- சென்னை கோபாலபுரத்தில் மாற்றுத்திற னாளிகள் கூட்டமைப்பு சார்பில் 56 இணை களுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருணங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகித்து நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றித் தருவோம்” என்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா, அந்த கொடிய நோயிலிருந்து சிறிது மீண்டு வந்தோம். 10 நாள் கூட இடைவெளி இல்லை, மழை பெய்து கொண்டே தான் இருந்தது. அந்த அளவுக்கு மழை பெய்து கொண்டி ருக்கிறது. அந்த மழையையும் சமாளித்துக் கொண்டிருக்கிறோம் . மழை நீர் வடிகால் பணிகளை நாங்கள் முழுமையாக செய்து முடிக்கவில்லை. 80 முதல் 95 விழுக்காடு தான் முடித்தி ருக்கிறோம், அதற்கே மக்களிடம் இருந்து பாராட்டு வருகிறது. இன்னும் பணிகள் இருக் கிறது. அதையும் வரக்கூடிய காலகட்டத்தில் செய்து முடிப்போம் என முதலமைச்சர் தெரி வித்தார். நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், எழிலன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.