tamilnadu

img

திருவாரூரில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

திருவாரூரில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தமிழ்நாடு சிட்கோ சார்பில் திருவாரூர் மாவட்டம், வண்டாம்பாளை கிராமத்தில் ரூ.8.30 கோடியில் சாலை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் உருவாக்கப்பட்ட புதிய சிட்கோ தொழிற்பேட்டையை, தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சிட்கோ மூலம் தொழிற்பேட்டை அமைக்கும் பொருட்டு திருவாரூர் பேருந்து நிலையத்திலிந்து, சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள வண்டாம்பாளை கிராமத்தில் சுமார் 18.83 ஏக்கர் நிலப்பரப்பளவில் புதிய வேளாண்மை உற்பத்தி தொழிற்பேட்டை அமைத்திட திருவாரூர் மாவட்ட ஆட்சியர், முன் நுழைவு அனுமதி 28.04.2022-இல் வழங்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், மேற்கண்ட நிலத்திற்கான நில மதிப்புத் தொகை ரூ.18,79,523-ஐ அரசு கணக்கில் 25.05.2022-ல் சிட்கோவால் செலுத்தப்பட்டது. 
முதற்கட்டமாக 20 தொழில் மனைகள் உருவாக்கும் பொருட்டு சுமார் 1.97 கோடியில் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர், மின்விளக்குகள் மற்றும் மழைநீர் வடிகால் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள இத்தொழில் பேட்டையில் 20 தொழில் மனைகள், வேளாண்மை தொழில் சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு தொழில் மனைகள் விரைவில் ஒதுக்கீடு செய்யப்படும். 
மேற்கண்ட தொழிற்பேட்டையை தமிழக முதல்வர், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொழிற்பேட்டையினை மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் பார்வையிட்டார். 
நிகழ்வில், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌம்யா, நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், தஞ்சாவூர் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளர் ப.ராஜாராமன் மற்றும் திருவாரூர் மாவட்ட சிறு, குறு, நடுத்தர சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.