நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் சத்தீஸ்கர் பாஜக அரசு நரவேட்டை
நீதி விசாரணை கோரி இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜூன் 2 - சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் ஒன்றிய - மாநில பாஜக அரசுகள், போலி மோதல் படு கொலையை நிகழ்த்தி வருகின்றன. இதன்மீது நீதி விசாரணை நடத்தக் கோரி திங்களன்று (ஜூன் 2) சென்னை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ(மார்க்சிஸ்ட் -– லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட் டத்தை நடத்தின. சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விசிக தலைவர் தொல். திருமாவளவன், சிபிஐ(எம்எல்) லிபரேசன் மாநிலச் செயலாளர் பழ. ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தியாளர் களிடம் தலைவர்கள் கூறியதாவது: பெ. சண்முகம் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பேசுகையில், “மாவோயிஸ் டுகளை அழித்தொழிப்பு கொள்கையை சத்தீஸ்கரில் தொடர்ந்து கடைப்பிடிக் கிறார்கள். மே 22 அன்று 27 மாவோ யிஸ்டுகள் ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளனர். இந்த படுகொலைகளை கண்டிக்கிறோம். சத்தீஸ்கர் மாநி லத்தில் நிறைந்துள்ள கனிம வளங் களை பன்னாட்டு - உள்நாட்டு கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு, தடையின்றி தாரை வார்க்கவே ஆட்சி யாளர்கள் இத்தகைய அழித்தொ ழிப்பை செய்கின்றனர். தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் அழித்தொ ழிப்பது என்று ஆட்சியாளர்கள் முடி வெடுத்தால், இந்தியா ஜனநாயக நாடாக இருக்காது. மாவோயிஸ்டுகள் பல முறை பேச்சு வார்த்தைக்கு முன்வந்தும், ஒன்றிய பாஜக அரசு பிடிவாதமாக அழித்தொ ழிப்பை செய்கின்றனர். நக்சல் அழித் தொழிப்பு என்கிற பெயரில் போலி என்கவுண்டர் நடத்துவதை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண வேண்டும், போலி என்கவுண்டர் மீது நீதி விசாரணை நடத்திட வேண் டும். கனிம, வன வளங்களை கார்ப்ப ரேட்டுகளுக்கு தாரை வார்க்கக் கூடாது, வாழ்வுரிமைக்காக போராடும் ஆதிவாசி மக்கள் மீதான கொடூரமான அடக்குமுறைகளை கைவிட வேண் டும், ஆதிவாசி மக்களின் வன, நில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். எதிர்க்கருத்து கூறுபவர்களை நகர்ப்புற நக்சல் என்று சித்ரவதைக்கு உள்ளாக்குவதை ஏற்க முடியாது. மாவோயிஸ்டுகளின் அரசியலில், எங்களுக்கு உடன்பாடில்லை. அதே நேரத்தில் அவர்கள் வைத்திருக்கும் நியாயமான கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். மாறாக, அடக்குமுறை களை ஏவக்கூடாது. பாஜக அரசின் வெறுப்பு அரசியலின் ஒரு பகுதி யாகவே இந்த மாவோயிஸ்ட் அழித் தொழிப்பு நடவடிக்கை உள்ளது” என்றார். இரா. முத்தரசன் “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் பேசுகையில், பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு இந்த படு கொலைகளை நிகழ்த்தி வருகிறது. ஒன்றிய அரசின் மாவோயிஸ்ட் அழித் தொழிப்பு நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் எதிர்ப்புக்குரல் எழுந்து உள்ளது. இந்த எதிர்ப்பு நாடு முழுவதும் பரவும்” என்றார். தொல். திருமாவளவன் விசிக தலைவர் தொல்.திருமாவள வன் பேசுகையில், “இந்திய ஒன்றிய அரசு, நக்சல் அழிப்பு என்று கூறினா லும், இது பழங்குடி மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும். உள்நாட்டு மக்களை நசுக்குகிற நடவடிக்கை யாகும். எனவே தான், இதனை சமூக ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இதற்கெதிராக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, இடதுசாரிகளோடு இணைந்து போராடுகிறோம். உள் துறை அமைச்சர், ‘ஆபரேசன் காகரை’ கைவிட வேண்டும். நாடாளு மன்றத்தில் இதனை எழுப்புவோம். தேசிய அளவில் இடதுசாரிகள், இதர ஜனநாயக சக்திகளை ஒருங்கி ணைத்து வருகிறார்கள். அவர்களோடு இணைந்து அடுத்தகட்ட நடவடிக் கைக்கு செல்வோம்” என்றார். பழ. ஆசைத்தம்பி சிபிஐஎம்எல் மாநில செயலாளர் பழ. ஆசைத்தம்பி பேசுகையில், “காடு, மலைகளில் உள்ள கனிம வளங்களை முதலாளிகளுக்கு கொடுக்க மாவோ யிஸ்டுகள் தடையாக உள்ளதால் இத்தகைய ஒடுக்குமுறையை ஒன்றிய அரசு ஏவியுள்ளது. இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசே, அதனை மீறி செயல்படுகிறது. இதைக் கைவிட்டு, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.