சென்னை/தருமபுரி,ஜன.20- அதிமுக ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின், வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏழு மணி நேரமாக சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமைச்சர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் வீடு மற்றும் இடங்கள் உள்ளிட்ட 57 இடங்களில் வியாழனன்று (ஜன.20) லஞ்ச ஒழிப்புதுறை யினரின் சோதனை நடத்தினர். அதிமுக தருமபுரி மாவட்டச் செயலாள ரும், பாலக்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக புகார் எழுந்தது. தருமபுரி மாவட்டம் கெரகோட அள்ளி கிராமத்தில் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் ஜன.20 வியாழன் காலை 7 மணிக்கு லஞ்ச ஒழிப்பு காவல்துறை யினர் சோதனையை துவக்கினர். அப்போது வீட்டுக்குள் வெளி ஆட்கள் யாரையும் அனு மதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களையும் வெளியில் செல்வதற்கு அனுமதி மறுத்த னர்.
மகன் வீட்டிலும் ரெய்டு!
கே.பி.அன்பழகன் வீட்டில் அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். வீட்டு வளாகத்திலும் சோதனை நடத்தப் பட்டது. இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். அந்த ஆவணங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது. கே.பி.அன்பழகனுக்கு சந்திரமோகன், சசிமோகன் என 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் சந்திரமோகன் மூத்த மகன். 32 வய தான அவர் திருமணமாகி மனைவி வைஷ்ண வியுடன் கெரகோட அள்ளி கிராமத்திலேயே வசித்து வருகிறார். இவரது வீட்டிலும் சோத னை நடத்தினர். அதேபோல், அமைச்சரின் உறவினர்கள் சந்திரசேகர், சம்பத், சண்முகம், மகேஷ் குமார் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
ஆதரவாளர்- எம்எல்ஏ வீடும் தப்பவில்லை!
இதேபோல், காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் மாணிக்கம் ஆகியோரது வீடுகளி லும் சோதனை நடத்தப்பட்டது. பாலக் கோட்டில் கே.பி.அன்பழகனின் ஆதர வாளர்கள் வீடுகளிலும் சோதனை நடை பெற்றது. தருமபுரி பெரியாம்பட்டி அருகே உள்ள கல்குவாரி, ரெடிமிக்ஸ் மற்றும் காரி மங்கலம் காமராஜ் நகரில் உள்ள மருத்துவ மனை மற்றும் பள்ளி உள்ளிட்ட நிறு வனங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். கே.பி.அன்பழகனின் தீவிர ஆதர வாளரும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கோவிந்தசாமி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டது. தருமபுரி இலக்கியம்பட்டியில் உள்ள கோவிந்தசாமி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவலர்கள் சோதனை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர். தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள கே.பி.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேல் வீடு, தருமபுரி நகர செயலாளர் பூக்கடை ரவி வீடு ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் மட்டும் கே.பி.அன்பழ கனின் ஆதரவாளர்கள், உறவினர்கள் வீடு என மொத்தம் 41 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. மேலும், கே.பி.அன்பழகன் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கல்குவாரி, ஹாட்மிக்ஸ் பிளாண்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வரும் கே.பி. அன்பழ கன் குடும்பத்தினர் கிளினிக் மற்றும் பள்ளிக் கூடங்களையும் நடத்தினர். இந்த நிறு வனங்கள் தருமபுரி மாவட்டம் பெரியான்பட்டி யில் செயல்பட்டு வருகிறது. காரிமங்கலம் காமராஜ் நகரில் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகிறது. இங்கும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை யின்போது, அமைச்சரின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னையில்...
இந்த சோதனை சென்னையில் 3 இடங்களி லும் நடந்தது. கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையிலுள்ள அலுவலகம், நுங்கம்பாக்கம் கத்தீட்ரல் கார்டன் லைன், அடையாறு காந்திநகர் 2-வது பிரதான சாலையிலுள்ள சிவக்குமார் அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெற்றது. இவர் கே.பி.அன்பழகனுக்கு நெருக்கமானவராவர். சென்னை கோபாலபுரத்தில் கணேஷ் கிரானைட் என்கிற பெயரிலான நிறுவன அலு வலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலு வலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர தெலுங்கானா மாநிலம் கரீம் நகரில் உள்ள கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடத்துவது பற்றி காவல்துறையினர் ஆலோசித்து வருகிறார்கள். சுமார் 7 மணி நேரம் கே.பி.அன்பழ கனுக்கு சொந்தமான 57 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் முதல் கட்ட மாக ரூ.11.32 கோடி வருமானத்துக்கு அதிக மாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் அன்பழகன், அவரது மனைவி, மகன்கள், மருமகள் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.