புதுதில்லி, பிப்.3- ஊனமுற்றோர் அனைவரையும் எளிதாக அணுகக்கூடிய தன்மை, சமத்துவம் மற்றும் கண்ணியமானதொரு வாழ்க்கைக்கான லட்சி யங்கள் நிறைவேற்றப்படும் என பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் படாடோபமாகக் கூறிய வார்த்தை கள் அடுத்த நாள் வெளியான பட்ஜெட் உரை யில் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டன என்று ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜனவரி 31 அன்று குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில உரையாற்றும்போது ஊனமுற் றோர் சமூகத்தினருக்கு சில நம்பிக்கைகளைக் கொடுக்கும் விதத்தில் சிலவற்றைக் கூறினார். அவர் தன் உரையின்போது, ஊனமுற்றோர் அனைவரையும் எளிதாக அணுகக்கூடிய தன்மை, சமத்துவம் மற்றும் கண்ணியமான தொரு வாழ்க்கைக்கான லட்சியங்கள் நிறை வேற்றப்படும் என்று அடிக்கோடு இட்டிருந் தார். ஆனால் அந்த நம்பிக்கைகள் எல்லாம் அடுத்தநாள் வெளியான பட்ஜெட்டில் அடித்து நொறுக்கப்பட்டுவிட்டன.
சென்ற தடவை அளித்ததைப்போல் அல்லா மல் இந்தத்தடவை ஊனமுற்றோர் மேம்பாட்டுக் கான துறைக்கான ஒதுக்கீட்டில் 12 சதவீதம் குறைக்கப்படாது, சற்றே உயர்வு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. இருப்பினும், 2020-21 பட்ஜெட் மதிப்பீடுகளுடன் ஒப்பிடும்போது 112.97 கோடி ரூபாய் குறைவு காணப்படுகிறது. ஊனமுற் றோர் நலத்திற்கான தேசியத் திட்டங்களிலும் மொத்த ஒதுக்கீட்டில் 2020-21 மதிப்பீடுகளை ஒப்பிடும்போது, இவ்வாறே 20 கோடி ரூபாய் வரை குறைவு காணப்படுகிறது. இதே போன்றே 2020-21இல் ஒதுக்கப்பட்ட தொகை யைவிட நேஷனல் டிரஸ்ட் மற்றும் ஊன முற்றோருக்கான சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீட்டிலும் குறைவு காணப்படுகிறது. இந்திய செயற்கை உறுப்புகள் உற்பத்திக் கழகத்திற்கான (ALIMCO-Artificial Limbs Manufacturing Corporation of India) ஒதுக்கீடு கூட சென்ற ஆண்டு 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வெறும் 0.10 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டி ருக்கிறது. இக்கழகத்தின் சார்பில் உடல் ஊனமுற்றோருக்காக ஏராளமான கருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப் பட்டு வந்தன.
இலவச சுகாதார பாதுகாப்பு உதவி மறுப்பு
கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தபோதிலும், அனைத்து ஊனமுற்றோருக்குமான சுகாதாரப் பாதுகாப்பு உதவிகளை இலவசமாக அளித்திட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. அதேபோன்றே வேலையில்லாதிருக்கும் ஊனமுற்றோர் பட்டாளத்திற்கு எவ்விதமான உறுதிமொழியை அளித்திடுவதிலும் பரிதாப கரமான முறையில் தோல்வி அடைந்திருக் கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியா ருக்குத் தாரை வார்க்க அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாலும், கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் வேலை யிழப்புகள் ஏற்பட்டிருப்பதாலும், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சிக் கழ கத்திற்கான ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தப் பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அத னால் ஊனமுற்றோருக்கு கடன் உதவிகளை அளித்திட முடியும். ஆயினும் சென்ற பட்ஜெட்டில் ஒதுக்கியதைவிட இப்போது கணிசமாக வெட்டப்பட்டிருக்கிறது. 2019-20இல் 41 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததில் இருந்து சென்ற ஆண்டு வெறும் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடவையும் இதே போன்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
விலைவாசிகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தபோதிலும்கூட, ஒன்றிய அரசு ஊனமுற்றோர் ஓய்வூதியத்திற்கான தொகையை வெறும் 300 ரூபாயாகவே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வரு கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வேலை யிழப்பை எதிர்கொண்டவர்களுக்கும் எவ்வித மான நிவாரணத்தையும் அளித்திட அரசு முன் வரவில்லை. கருணை உதவிப் பணம் ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என 2020இல் அறி வித்ததும், பொருளாதார ஆய்வறிக்கை யின்படி 2.82 கோடி பேர்களுக்கே சென்றிருக் கிறது. இதில் ஊனமுற்றோர் அல்லாது விதவை கள் மற்றும் மூத்த குடிமக்களும் அடங்குவர். இவ்வாறு குடியரசுத் தலைவர் உரையில் கூறப்பட்ட ஊனமுற்றோர் அனைவரையும் எளிதாக அணுகக்கூடிய தன்மை, சமத்துவம் மற்றும் கண்ணியமானதொரு வாழ்க்கைக் கான லட்சியங்கள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது, அடுத்த நாளே அளிக்கப்பட்ட பட்ஜெட் உரையில் அடித்து நொறுக்கப்பட்டு விட்டன. இவ்வாறு அறிக்கையில் தெரி வித்துள்ளார். (ந.நி)