tamilnadu

img

28 காளைகளை அடக்கிய விஜய்க்கு கார் பரிசு

மதுரை, ஜன.16- மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஞாயி றன்று நடைபெற்ற ஜல்லிக் கட்டை பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி யமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  நிகழ்வில், மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்க டேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், மேயர் இந்திராணி, துணைமேயர் டி.நாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன் (தெற்கு), வி.வி.இராஜன் செல்லப்பா (திருப்பரங்குன்றம்). மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல். செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி. தளபதி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாகப் “பாது காப்பான ஜல்லிக்கட்டை உறுதிப்படுத்துவோம்’’ என்ற உறுதிமொழியை மாடு பிடி வீரர்கள், மாட்டின் உரி மையாளர்கள் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்றுக் கொண்டனர்.

மாடுபிடி வீரர்கள்

அவனியாபுரம் ஜல்லிக் கட்டில் 28 காளைகளை பிடித்து முதலிடம் பெற்ற மதுரை சோலையழகு புரத்தைச் சேர்ந்த விஜய்க்கு கார் பரிசளிக்கப்பட்டது. 17 காளைகளை பிடித்து  2-ஆம் பெற்ற அவனியா புரம் கார்த்திக்கு இரு  சக்கர வாகனம் பரிசளிக்கப் பட்டது.  இதேபோல் 13 காளை களை பிடித்து 3-ஆம் இடம் பெற்ற மதுரை விளாங்குடி யைச் சேர்ந்த பாலாஜிக்கு பசு மாடு பரிசளிக்கப்பட்டது.

மாட்டின் உரிமையாளர்கள்

இதேபோல், சிறந்த மாட்டிற்கான முதல்பரிசை காத்தனேந்தல் காமேஷ் பெற்றார். அவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப் பட்டது. இரண்டாம் பரிசை வில்லாபுரம் கார்த்திக் பெற்றார். மூன்றாம் பரிசு அவனியாபுரம் முருகனுக்கு வழங்கப்பட்டது. அவனியாபுரம் ஜல்லிக் கட்டில் 61 பேர் காய மடைந்தனர். இவர்களில் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டின் முடி வில், மாடுபிடி வீரர் களுக்கும் மாட்டின் உரிமை யாளர்களுக்கும் பரிசுகள், கேடயம், பாராட்டுச் சான்றி தழ்களைப் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.