சென்னை, ஜூன் 15- சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதிகளுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக பந்தல் ராஜா என்பவர் தலைமையிலான சாதிவெறிக் கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத் திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி யது. அலுவலக பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி யதுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் மீதும் தாக்கு தல் நடத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்த புகாரின் பேரில் பெண்கள் உட்பட 13 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மதிமுக பொதுச்செய லாளர் வைகோ ஆகியோர் கண்ட னம் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட் டுள்ள எக்ஸ் பதிவில், “சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைத்ததற் காக தேசிய கட்சியான மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு நெல்வேலி அலுவலகம் சூறையா டப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ் நாட்டில், இன்றளவும் சாதிய தீண் டாமையால் இதுபோன்ற சம்பவங் கள் நிகழ்வது வேதனைக்குரியது. எனவே, இந்த சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் மீது உரிய சட்ட நட வடிக்கை எடுக்குமாறு முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று தெரி வித்திருக்கிறார்.
இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை யில், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையருக்கு ஆதரவு கொடுத்ததால், ஆத்திரமடைந்த சாதி வெறியர்கள் சிலர், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கத்திற்குள் புகுந்து மேசை, நாற் காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். அப்போது அலுவலகத்திற்குள் இருந்த தோழர்களையும் தாக்கியுள்ளனர். இந்த நிகழ்வு, மிகவும் கண்டனத்திற் குரியது. மேலும், தென் மாவட்டங்க ளில் பகிரங்கப்படுத்தப்படும் இந்த சாதி வெறிக் கொடுமையை இரும் புக் கரம் கொண்டு அடக்க வேண்டி யது தமிழ்நாடு அரசின் முக்கிய கட மையாகும். சட்டப்படி நடைபெறும் சாதி மறுப்புத் திருமணங்களைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. இது தொடர்ந்தால், அதுவே சாதிக் கல வரமாக மாறும் நிலை ஏற்பட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட வும் கூடும். எனவே, இந்த சாதிவெறி யர்கள் மீது கடுமையான நடவ டிக்கைகள் அவசரம், அவசியம்” என்றும் தெரிவித்துள்ளார்.
முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இணையருக்கு பொதுவுடைமை இயக்கத் தோழர் கள் ஆதரவாக இருந்ததால் ரெட்டி யார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது ஒரு கும்பல் மூர்க்கத்தனமாக தாக் குதல் நடத்தியிருப்பது வன்மை யான கண்டனத்திற்குரியது. அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண் டும். தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்ப தும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது தமிழக காவல்துறை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற் கொண்டு, நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்று வலியு றுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.