tamilnadu

மதுரை காமராஜர் பல்கலை.யில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தாமிர வடிகட்டி தொழில்நுட்ப ஆராய்ச்சி

மதுரை, மே. 11- மதுரை காமராஜர் பல்க லைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத் துவதற்கான தாமிர அடிப்படை யிலான வடிகட்டி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு தேசிய அறிவி யல் மற்றும் தொழில்நுட்பத் துறை ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கி யுள்ளது.  உலகம் முழுவதும் 190- க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் 23 முதல் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.  உலகம் முழுவதும் உள்ள நாடு கள் கொரோனா வைரஸ் தொற் றுக்கு எதிரான தடுப்பு மருந்து உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றன. இந்தி யாவில் புதுதில்லியை மைய மாக கொண்டு இயங்கி வரும் தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை, அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சித்துறை இணைந்து கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சிகளுக்கு சிறப்பு நிதி அளித்து வருகிறது.  

இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் வேதியி யல் துறை பேராசிரியர் ஆர். மயில்முருகன் தலைமையி லான குழுவினர் மேற்கொண் டுள்ள தாமிர வடிகட்டி தொழில் நுட்ப ஆராய்ச்சியை தேசிய அறி வியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அங்கீகரித்து முதல் தவ ணையாக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.  இதில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற் கான தொழில்நுட்ப ஆராய்ச்சி யில் மதுரை காமராஜர் பல்க லைக் கழகத்தைச் சேர்ந்த வேதி யியல் துறை பேராசிரியர் மயில் முருகன் மற்றும் உயிரி தொழில் நுட்பவியல் துறை பேராசிரியர் கோபால் மற்றும் தேனி அரசு மருத்துவமனை மருத்துவர் அமுதன் ஆகியோர் ஈடுபட உள்ளனர். இந்த ஆராய்ச்சிக் காக மதுரை காமராஜர் பல்க லைக்கழகத்தில் பிரத்தியேக ஆய்வுக்கூடம் ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது.  கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தாமிர வடி கட்டி தொழில்நுட்ப ஆராய்ச்சி குறித்து பேராசிரியர் மயில் முருகன் கூறியது “கொரோனா வைரஸ் நாம் உபயோகப்படுத் தும் பொருள்களில் பல மணி நேரம் உயிர் வாழும் தன்மை உடையது.

மேலும் நாம் தற்காப் புக்காக பயன்படுத்தும் கவசம் உள்ளிட்ட பொருள்கள் அனைத் தும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள மட்டுமே முடிகிறது. கொரோனா வைரஸை அழிக்க முடிவதில்லை. இந்நிலையில் பல்கலைக் கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் படி, தாமிர வடி கட்டி தொழில்நுட்பம் கொரோனா வைரஸ் தொற்றை தடுத்து அதை செயலிழக்கச் செய்கிறது என்பது தொடக்க ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற்றால் நாம் உபயோகப்படுத்தும் குளிர் சாதன இயந்திரம், முகக் கவ சங்கள், நாம் அணியும் உடை கள், வீட்டுக்கு பூசப்படும் பெயி ண்ட் உள்ளிட்ட பல்வேறு பொருள் களில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொரோனா வைரஸை அழிக்க முடியும். இது போன்ற தொழில்நுட்பங்கள் வெற்றி பெற்று வளர்ச்சியடை யும் பட்சத்தில் பல்வேறு நோய்த்தொற்றுகளிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.