tamilnadu

img

கொடிக்கம்பங்களை அகற்றச் சொல்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது!

கொடிக்கம்பங்களை அகற்றச் சொல்வது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது!

சென்னை, ஏப்.21- பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நிறுவியுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற  வேண்டும்என சென்னை உயர் நீதி மன்ற மதுரைக் கிளை  பிறப்பித்துள்ள உத்த ரவை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்  துள்ளது. இதேபோன்று, தனிநபர் ஒருவர் தாக் கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, இரு  நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்ததற்கு எதிராகவும் சீராய்வு மனுவை யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட தாக்கல் செய்  துள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தமது அறிக் கையில் குறிப்பிட்டிருப்பதாவது: சட்டம் இயற்றுமாறு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தனி  நீதிபதி இளந்திரையன் அவர்கள், அரசி யல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள், தமிழ்  நாடு முழுவதும் வைத்திருக்கின்ற கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டுமென கடந்த  27.1.2025 அன்று உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், திங்க ளன்று (ஏப்.21) மேல்முறையீட்டு மனு தாக்  கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவில், தனி  நீதிபதி அளித்த தீர்ப்பு இந்திய அரசியல மைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை  உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை 19(1)(a) & 19(1)(c) சங்கம் அமைக்கும் உரி மைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட விஷயம் குறித்து சட்டம் இயற்றுமாறு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும், அது அரசின் நிர்வாக அதிகாரம் என்ற சட்டப்பூர்வமான அம்சங்களை கணக்கில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி உழைக்கும் வர்க்கத்தின் சின்னம் குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி மக்க ளுக்காக பல தியாகங்களை செய்து பணி யாற்றுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி,  உழைக்கும் வர்க்கத்தினர் மற்றும் விவ சாயிகளை பிரதிபலிக்கின்ற அடையாள சின்னமாகும். அதை எடுக்க சொல்வது ஜன நாயக மீறலாகும். மேலும், கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு போடுவதற்கு முன் எங்கள் தரப்பு  நியாயத்தைக் கேட்கவில்லை என்றும், எனவே, மேற்கண்ட உத்தரவை ரத்து செய்ய  வேண்டுமெனவும், மேல் முறையீடு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.  சீராய்வு மனு தாக்கல் அதோடு மட்டுமல்லாமல், தனி நீதிபதி  உத்தரவுக்கு எதிராக ஏற்கெனவே ஒருவர்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை,  இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு 6.3.2025  அன்று தள்ளுபடி செய்ததை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  சீராய்வு மனுவும் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இந்த மனுக்களை விசாரித்து இறுதி  உத்தரவு பிறப்பிக்கும் வரை, கட்சி கொடிக்  கம்பங்களை அகற்ற தடையாணை உத்த ரவு பிறப்பிக்கவும் மனுவில் கோரப்பட்டுள் ளது. இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித் துள்ளார்.