சென்னை,பிப்.16- ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகுசாமி ஆணையம் யார் யாருக்கு சம்மன் அனுப்புவது என்று ஆலோசனை நடத்தி வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெய லலிதா மரணம் தொடர்பாக ஆறு முகசாமி விசாரணை ஆணை யம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் 114-க்கும் மேற்பட்ட காட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்திருந்த நிலை யில் மருத்துவர்களிடம் விசா ரணை நடைபெற்றபோது மருத்துவ நிபுணர்களின் குழுவை அமைத்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் வலியுறுத்தியது. ஆனால் ஆணையம் அதை ஏற்காததால் அப்பல்லோ நிர்வா கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு 2 வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த சூழலில் ஆறுமுகசாமி ஆணை யத்துக்கு உதவ நிபுணத்துவம் பெற்ற 6 பேர் கொண்ட மருத்து வர்கள் குழுவை அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி நிகில்தாண்டன் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டது. இப்போது இந்த மருத்துவ குழு மாற்றி அமைக்கப்பட்டு சந்தீப் சேத்தலை மையில் குழு அமைக்கப்பட்டுள்ள தாக எய்ம்ஸ் இயக்குநர் ஆறுமுக சாமி ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இந்த நிலையில் ஆறுமுக சாமி ஆணையம் புதனன்று (பிப்.16) மீண்டும் செயல்பட தொடங்கியது. அப்போது யார் யாருக்கு சம்மன் அனுப்பலாம் என ஆலோசிக்கப்பட்டது. ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லோ மருத்து வமனை வழக்கறிஞர்கள் பங்கேற்ற னர். ஆணையத்தில் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், அப்பல்லொ மருத்துவமனை வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பின்னர் ராஜா செந்தூர் பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,“ 154 சாட்சிகளில் நான் 114 சாட்சிகளிடம் ஏற்கனவே குறுக்கு விசாரணையை முடித்து விட்டேன். எனவே ஆணையத்தில் விசாரணை தொடங்கினால் 10 நாளில் எனது குறுக்கு விசாரணை யை முடித்து விடுவேன் என்றார்.