தென்காசி, ஜன.2- தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே உள்ள குலசேக ரப்பேரி கண்மாயின் வடக்கு கடை சிப் பகுதியில் தலையணையிலி ருந்து பெரியாற்றின் வழியே வந்து கண்மாயில் தண்ணீர் கலக்கும் இடத் தின் அருகில் உள்ள வாசுதேவ நல்லூரைச் சேர்ந்த தொழிலதிபரும் எஸ்.டி. கல்விக்குழுமங்களின் நிறு வனருமான தங்கப்பழத்துக்கு சொந் தமான விவசாய நிலத் தில் விவ சாயப்பண்ணை அமைப்பதற்காக நிலத்தை சீர்படுத்தியபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட அளவுக்குள் குண்டு கற்கள் மற்றும் கூழாங்கற்களும், அதற்கு கீழே மண லும் முதுமக்கள் தாழிகளும், மிகச் சிறியது முதல் பெரியது வரையி லான கலைநயம் மிக்க சுட்ட மண் பாண்டங்கள், இரும்பினாலான வாள், வில், வேல், குத்து ஈட்டி, செப்பு பாத்திரங்கள், கல்லில் செதுக்கப் பட்ட குறியீடுகள் கிடைத்துள்ளன. இவை அனைத்தையும் முறையாக சேகரித்து தமிழக தொல்லியல் துறைக்கும் தகவல்கள் தெரி விக்கப்பட்டு பத்திரிகை, தொலைக் காட்சிகளில் செய்தி வெளியிடப் பட்டது.
மதுரையிலிருந்தும், குற்றா லத்திலிருந்தும் உடனடியாக வருகை தந்த தொல்லியல் அதிகாரி கள் மேற்கண்ட பொருட்களையும், அவை கண்டெடுக்கப்பட்ட இடத் தையும் பார்வையிட்டு இப்பகுதி யில் ஆய்வுநடத்த தொல்லியல் துறை மூலம் ஏற்பாடு செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், அது வரை இப்பகுதியில் எவ்வித பணி களையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் கூறிவிட்டுச் சென்றனர். ஆனால் ஓராண்டு கடந்த நிலையி லும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. அதனால், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்டக்குழு வின் சார்பில் மாவட்டத்தலைவர் மதி யழகன், மாவட்டச்செயலாளர் பக்ரு தீன் அலி அகமது, மாவட்ட நிர்வாகி கள் என்.பால்ராஜ், இரா.நடராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியரை கடந்த 2022 -அக்டோபர் 13 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நேர டியாக சந்தித்து இப்பகுதியில் தொல்லியல் ஆய்வுநடத்த வேண்டி யதன் அவசியத்தை விளக்கி விரி வான மனு ஒன்றையும் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதியளித்ததோடு மட்டு மின்றி, கடந்த 2022 அக்டோபர் 29 ஆம் தேதி நேரில் வருகை தந்து பொருட்கள் வைக்கப்பட் டுள்ள இடத்தையும், பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் தமிழகத்தின் பகுதிகளில் தொல்லியல் ஆய்வு கள் நடத்தியதின் விளைவாக தமி ழர்களின் வாழ்வியல், பண்பாடு, நாகரீகம், கலாச்சாரம் பற்றிய அதி சயிக்கத்தக்க தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. எனவே இப்பகுதியிலும் முறையான ஆய்வு நடக்கும்பொழுது மேலும் பல தக வல்கள் கிடைக்கலாம் எனவும் பொருட்களை நேரில் பார்வை யிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் இப்பகுதியில் பல்வேறு இடங்களில் விவசாயப் பணிகளுக் காக மண் எடுத்த பொழுது முது மக்கள் தாழி உட்பட பல்வேறு பொருட்கள் கிடைத்ததாகவும், தரணி சர்க்கரை ஆலைக்கு மேற்கே மக்கள் குடியிருந்ததாகவும் செவி வழிச் செய்திகள் உலவி வந்த நிலை யில் இப்போது கிடைத்திருக்கக் கூடிய தொல்பொருட்கள் அதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. எனவே இப்பகுதியில் தொல்லியல் ஆய்வை உடனே தொடங்க வேண்டு மென பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாசுதேவ நல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா. நடராஜனும் கோரிக்கை விடுத்துள் ளனர்.