tamilnadu

img

ஏப்.24 தஞ்சையில் ஆளுநருக்கு கருப்புக் கொடி

தஞ்சாவூர், ஏப்.20-  தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி செய்தியாளர் சந்திப்பில்  கூறியதாவது:  தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக் குரிய வகையில் கருத்துக்களை பேசி  வருகிறார். ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகளின் முகவர் போலவும், அரசியல்வாதி போலவும் அவரது பேச்சுக்கள் உள்ளது. ஆளுநர் பொறுப்பு அரசியல் சாசனம் சார்ந்த  பொறுப்பு அதை மீறி அவர் செயல் படுகிறார். குறிப்பாக மார்க்சியத்தை தொடர்ந்து அவதூறாக பேசி வரு கிறார். எனவே அவர் போகிற இட மெல்லாம் கருப்புக்கொடி காட்டுவது என்கின்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ளது.  இந்நிலையில், ஏப்ரல் 24ஆம் தேதி  தஞ்சை வரும் ஆளுநருக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருப்புக் கொடி  காட்டி எதிர்ப்பை தெரிவிப்பது என முடிவு செய்துள்ளது. கோடை தொடங்கியுள்ள நிலை யில், தஞ்சை மாநகராட்சி பகுதி மட்டு மல்ல, தஞ்சை மாவட்டம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க  போர்க்கால அடிப்படையில் அரசு அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். அறிவிக்கப்படாத மின்வெட்டு தடுக்கப்பட வேண்டும், தவிர்க்கப்பட வேண்டும்.  ஜூன்.12  பாசனத்திற்காக கல்லணை யிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படு வதற்கு முன்பாக  பாசன வாய்க்கால் கள், நீர்நிலைகள் முழுமையாக ஏப்ரல்,  மே மாதத்திலேயே முறையாக தூர்வாரப் பட வேண்டும். 

திருஆரூரான் விவசாயிகள் போராட்டம்

திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் போராட்டம் 142 நாட்களை கடந்த நிலையில் சென்று  கொண்டிருக்கிறது. கரும்பு விவசாயி கள் பிரச்சனை சார்பாக, விவசாயி களுக்கு ஆதரவாக அரசு நீதிமன்றம்  செல்லும் என வேளாண் துறை செய லாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். உடனடியாக அதை செய்ய வேண்டும்.  சட்டமன்றத்திலேயே இது தொடர்பாக எங்கள் சட்டமன்ற உறுப்பினர் நாகை  மாலி பேசியுள்ளார். தஞ்சை மாவட்டத் திற்கு பொறுப்பு அமைச்சரான பள்ளிக்  கல்வித் துறை அமைச்சரும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்ப டும் என தெரிவித்துள்ளார். எனவே அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். கரும்பு விவசாயி களுக்கு நிலுவைத் தொகை இதுவரை  தரப்படாமல் உள்ளது. அதனை வட்டி யோடு சேர்த்து வழங்க வேண்டும். ஏற்க னவே இருந்த கரும்பு ஆலையை நிர்வாகம் விவசாயிகளின் பெயரை தவறாக பயன்படுத்தி, ஏராளமான வங்கிக் கடன் வாங்கி மோசடி செய் துள்ளனர். இந்த கடன் சுமையிலிருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். 

வெள்ளை அறிக்கை வெளியிடுக!

தஞ்சை மாநகராட்சி பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வரு கின்றன. அவற்றில் என்னென்ன பணி கள் நடைபெற்றுள்ளன, அவற்றிற்கு  எவ்வளவு தொகை செலவு செய்யப் பட்டுள்ளது என முழுமையான விவ ரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை யறிக்கையாக வெளியிட வேண்டும்.  பல இடங்களில் சாதாரண மக்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி அவர் களை அகற்ற புல்டோசர் வருகிறது.  ஆனால் சாஸ்திரா பல்கலைக்கழக நிர்வாகம் அரசு இடத்தை ஆக்கிர மித்துள்ளது. அதற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பும் வந்துள்ளது. ஆனால் தமிழக அரசு இதில் மௌனம் சாதிக்கிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி நிலமற்ற ஏழை எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயத் தொழிலாளர்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும். பல இடங்களில்  வீட்டுமனைப் பட்டா கேட்டு முதி யோர், விதவை, ஓய்வூதியத் தொகை  கேட்டு மனு கொடுத்து காத்திருக் கிறார்கள். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தவர்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அரசு இதனை முறைப்படுத்த வேண்டும். குடும்ப அட்டைகளை முறைப்படுத்துகிறோம் என்ற பெயரில் தகுதியுடையவர்களுடைய குடும்ப அட்டை கூட ரத்து செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் பொது விநியோக கடைகளில் மண்ணெண்ணெய் விநி யோகிக்கப்படுவதில்லை. இவை அனைத்தையும் அரசு முறைப்படுத்த வேண்டும். 

வேளாண் மண்டலமாக தொடர்க!

காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக தொடர வேண் டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. ஏலம் எடுக்கும் ஒப்பந்தம் ரத்து என்பதை வாய்  மொழியாக சொல்லாமல், அதனை அறி விப்பாக ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். டெல்டா பகுதி பாது காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தொடர வேண்டும் என்பதை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்து கிறது. ஏலம் எடுக்கும் ஒப்பந்தம் ரத்து  என்பதை வாய் மொழியாக சொல்லா மல், அதனை அறிவிப்பாக ஒன்றிய அரசு நிலக்கரித்துறை அமைச்சர் அறி விப்பாக வெளியிட வேண்டும். 

பட்டமளிப்பு விழா

தமிழகத்தில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பட்டமளிப்பு விழா ஓரி ரண்டு ஆண்டுகளாக நடத்தப்படா மல்  உள்ளது. ஆளுநர் செய்ய வேண் டியதை செய்வதில்லை, செய்யக்கூடா ததை செய்து  வருகிறார். ஆளுநர் பல் கலைக்கழகங்களின் வேந்தர் என்ற  உரிமையை  பயன்படுத்தி, மாநில பல் கலைக்கழகங்களின் துணைவேந்தர் களுக்கு நேரடி  உத்தரவிட்டு, மாநில அர சின் உரிமைகளில் நேரடியாக தலை யிட்டு வருகிறார்.  எனவே, ஆளுநர் மாணவர்களின் நலன் கருதி பட்டமளிப்பு விழா நடத்திட  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் சட்டங்களுக்கு ஆளுநர் தாம தம் செய்வது குறித்து, அந்தந்த மாநில  சட்டமன்றங்கள் தீர்மானம் நிறைவேற்ற  வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருப் பது சாத்தியமான விசயமே.  இவ்வாறு அவர் கூறினார்.