திருப்பூர், நவ. 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திருப்பூர் வடக்கு ஒன்றியம், நெருப்பெ ரிச்சல் பகுதி கிளைகள் சார்பில் 21 அன்று நெருப்பெரிச்சல் கொங்கு கலையரங் கத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற் றது. இந்த நிகழ்ச்சி ஒன்றிய குழு உறுப் பினர் மகாலிங்கம் தலைமை யில் நடை பெற்றது. தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கம் மற்றும் திருப்பூர் மாவட்ட அமைச்சூர் குத்துச்சண்டை சங் கம் சார்பில் காங்கேயத்தில் நடை பெற்ற மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டியில். இளம் சிறார் மக ளிர் பிரிவில் (சப் ஜூனியர்) வாவிபாளை யம் கிராமத்தைச் சார்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி இசட்.சல்மா ஜூபி தங் கப் பதக்கம் பெற்றுள்ளார்.மேலும் சிறந்த குத்துச்சண்டை வீரர் (பெஸ்ட் பாக்சர்) என்ற பதக்கத்தையும் பெற்றுள் ளார். மேலும் இந்த போட்டியில் இளம் சிறுவர் ஆண்கள் பிரிவில் தங்க பதக்கத் தையும், இளைஞர் பிரிவில் மோகித் குமார் வெண்கல பதக்கத்தையும், தர் ஷன் சில்வர் பதக்கத்தையும் பெற்றுள் ளனர். ஹப் பாக்ஸிங் போட்டியான 5 வயது முதல் 11 வயது குழந்தைகள் பிரிவு போட்டியில் அபிஷேக் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
மேலும் இவர்களுக்கான பயிற்சியாளராக கேசவன் இருந்து செயல்பட்டுள்ளார். போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் பெற்றவர் களை கௌரவிக்கும் விதமாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேக ரன், மாநில குழு உறுப்பினர் கே.காம ராஜ், திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலா ளர் ஆர்.காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய செயலாளர் எஸ்.பானுமதி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்க செயலாளர் அ.சந் தோஷ் ஆகியோர் சால்வை அணி வித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித் தனர். இந்த நிகழ்வில் பேசிய மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேக ரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர் களை பாராட்டியும், அவர்களுக்கு ஊக் கப்படுத்திய பயிற்சியாளர் மற்றும் பெற் றோர்களை வாழ்த்தியும், மாநில அரசு கள் விளையாட்டு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும். அப்போது தான் கிராமப்புற மாணவர்கள் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்த வீரர்களாக வருவார்கள். கூடுதலான விளையாட்டு வீரர்களையும் உரு வாக்க முடியும் என்று பாராட்டுரையில் குறிப்பிட்டு பேசினர். வெற்றி பெற்ற மாணவர்களுடைய பெற்றோர் மற்றும் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நூற் றுக்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.