tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் காத்திருப்புப் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!

அங்கன்வாடி ஊழியர் காத்திருப்புப் போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!

தமிழகம் முழுவதும் நடத்தி வந்த தொடர் காத்திருப்பு போராட் டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்ப தாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கம் அறிவித்துள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டபடி, மே மாதம்  கோடை விடுமுறையை முழுமை யாக வழங்க வேண்டும், அங்கன் வாடி மையங்களில் உள்ள 21 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பயனா ளிகளின் முகத்தை பதிவு செய்யும்  திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி வெள்ளியன்று (மே 2) மாநிலம் முழுவதும் அங்கன் வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். இதன் ஒருபகுதியாக சென்னை  தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்தி ருப்பு போராட்டத்தை தொடங்கி னர். இதனையடுத்து துறை இயக்கு நர் மெர்சி ரம்யா, சங்கத் தலைவர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடியவே, காத்திருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. பேச்சுவார்த்தை ஊழியர்கள் பந்தல் அமைத்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட தால் காவல்துறையின் தடுப்பு களில் துணியை கட்டி, அங்கன் வாடி ஊழியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். வெயிலின் தாக்கம்  காரணமாக ஊழியர்கள் பலர் தொடர்ந்து மயக்கமுற்றனர். இந்நிலையில் இயக்குநர் மெர்சி ரம்யா சனிக்கிழமையன்று (மே 3) சிஐடியு மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், மாநிலத் தலைவர் எஸ்.ரத்தின  மாலா, பொதுச் செயலாளர் டி.  டெய்சி, சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா. பால கிருஷ்ணன் உள்ளிட்டோருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி னார். இந்த பேச்சுவார்த்தை சுமார் 2  மணி நேரம் நடந்தது. அதன்பின் ஊழியர்களிடம் பேசிய தலைவர்கள், “பிரதான கோரிக்கைகள் மீது மே 22-ஆம்  தேதிக்குள் அரசு உயர் அதிகாரி களுடன் பேசி தீர்வு காணப்படும். குறுமைய ஊழியர்களின் படிகள் உறுதிப்படுத்தப்படும். பதவி உயர்வு வழங்கப்படும் என்பன உள்ளிட்ட உறுதிகளை இயக்குநர் வழங்கி உள்ளார். எனவே, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி  வைக்கப்படுகிறது” என்று அறிவித்தனர்.