சென்னை,டிச.16- சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட்டுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எப்படி தொழில்நுட்ப பிரச்சனை வரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணி யன் கேள்வி எழுப்பினார் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் மருத்துவ வளாகத்தில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு மருத்துவமனையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெள்ளியன்று (டிச.16) ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “ கிண்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ மனை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நான்கு மாதங்க ளுக்கு முன்னதாகவே தயார் நிலைக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது”என்றார். 4.89 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவ மனையில் மூன்று இடங்களி லிருந்து பொதுமக்கள் உள்ளே வரும் வகையில் ஏற்பாடு செய்யப் படுகிறது. தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் ரூ.4 கோடியில் பல்வேறு கட்டமைப்பு களை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது என்றும் அவர் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை தாமதத்திற்கு தொழில்நுட்ப பிரச்சினைதான் காரணம் என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச் சர் மக்களவையில் கூறியுள்ளார். சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்பட் டுள்ளதால் எப்படி தொழில்நுட்ப பிரச்சினை வரும். விரைவில் தில்லி சென்று அமைச்சரை சந்திக்கும் போது இது குறித்த விளக்கத்தை கேட்போம் என்றும் அவர் தெரிவித்தார்.