தஞ்சாவூர், நவ.25- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் தஞ்சை அருகே 100 நாள் வேலை திட்ட பணி யாளர்களை, அவர்கள் வேலை செய்யும் இடத்திற்குச் சென்று சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிந்தனர். தஞ்சை ஒன்றியம் ஆலக்குடி பகுதி யில் 100 நாள் வேலை நடக்கும் தளத் தில், உ.வாசுகி, தொழிலாளர்களை அவர்களது ஓய்வு நேரத்தில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பேசிய நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், ‘‘இத்திட்டத்தில் 100 நாட்களுக்கு வேலை கிடைப்பதில்லை. குறைந்த நாட்களுக்கே வேலை வழங்கப்படு கிறது. மேலும், சட்டக்கூலி ரூ.285-ஐ முழுமையாகத் தராமல், அதிகபட்ச சம்பளமாக ரூ.230 மட்டுமே தருகின்றனர். இங்கு 1,200 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். கடைகளில் அத்தி யாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைப்பதில்லை.
அவ்வப்போது சில பொருள்கள் மட்டுமே தருகின்றனர். கால்சியம், உப்புத் தன்மை அதிகம் உள்ள தண்ணீர் தான் குடிப்பதற்கு கிடைக்கிறது. தூய்மையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால், பலரும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துள்ள னர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இப்பகுதியை இணைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். இப்பகுதியில் உள்ள 4-ஆம் நம்பர் வாய்க்காலில், விவசாயப் பணி களுக்காக விவசாயிகள், டிராக்டர் போன்ற உழவுக் கருவிகள் சென்று வரும் நிலையில் சாலை சேதமடைந்து ள்ளது. எனவே, சாலையை சீரமைத்து தர வேண்டும். அரசு ஆரம்ப சுகாதாரநிலையத் திற்கு மருத்துவர்கள் ஒழுங்காக வருவதில்லை” எனப் பல்வேறு பிரச்ச னைகளை வெளிப்படுத்தினர். நூறு நாள் வேலைத்திட்ட பணியா ளர்களின் கோரிக்கையை கேட்டறிந்த உ.வாசுகி, ‘‘இதுகுறித்து அரசு அதிகாரி களின் கவனத்திற்கு கொண்டு சென்று, மக்கள் குறைகளை தீர்க்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும்’’ எனத் தெரி வித்தார். அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில் குமார், ஒன்றியச் செயலாளர் கே. அபிமன்னன், தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் ஒன்றியச் செயலாளர் கோவி ந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.