வேலூர், மார்ச் 21- வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுரு கன் அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:- திமுகவினர் தியாகம் செய்தது கிடை யாது என்று பிரதமர் மோடி கூறுகிறார். நாங்கள் தியாகத்தில் வளர்ந்தவர்கள். மிசா-வில் சிறைக்குச் சென்றவர்கள். அப்படி சிறைக்குச் சென்றபோது எனது மகன் சட்டையை பிடித்து இழுத்து அழுது கொண்டிருந்தார். மேலும் சிறையில் பார்க்க வந்த மகனை பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்தார்கள். மேலும் எனது மகனை நான் ஒரு வருடம் தொடாமல் பாசத்தை கட்டுப்படுத்தி தியாகம் செய் துள்ளேன். திமுகவில் செல்வாக்குள்ள வேட்பா ளர் நிற்பதால் சோதனை நடத்தி கைது செய்ய மேலிடம் சொன்னதாக எனக்கு தகவல் வந்துள்ளது. அதைப் பற்றி நாங் கள் கவலைப்பட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.