புதுக்கோட்டை, செப்.11 - புதூர் முக்கணா மலைப்பட்டி அடைக்க லம் காத்த அய்யனார் கோவில் அறங்காவல ராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அ.தேவராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவா சலை அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அ.தேவராஜன். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னவாசல் ஒன்றியக்குழு உறுப்பின ராக உள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் மாவட்டப் பொருளா ளராகவும் பணியாற்றி யுள்ளார். இவர் புதூர் முக்கணாமலைப்பட்டி அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் கோ வில் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை புதுக் கோட்டை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் தி. அருணா தெரிவித்து உள்ளார்.