பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் புதனன்று (நவ. 29) நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும் விடுதலை போராட்ட வீரரும் தகைசால் தமிழர் விருது பெற்றவருமான தோழர் என்.சங்கரய்யா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மேயர் பிரியா கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.