tamilnadu

img

தாமாக முன்வந்து வழக்கு பதிந்த மாநில மனித உரிமை ஆணையம்

சென்னை,மே 19- பட்டம் பெறவிடாமல் தடுக்கப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அரவிந்தசாமி மீதான காவல்துறை மனித உரிமை மீறலை விசா ரிக்க மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இதுகுறித்து மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கர வர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி தஞ்சை  தமிழ் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக் கழகத்தின் மாணவரும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவருமான கோ.அரவிந்தசாமி தனது ஆய்வியல் நிறைஞர்  பட்டத்தை பெறுவதற்காக சென்றிருந்தார். இந்த பட்டமளிப்பு விழா வில் பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற  முறையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று இருந்தார். அப்பொழுது ஆளுநருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் அரவிந்தசாமியை பட்டம் பெறவிடாமல் தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல் அவரை ஆய்வு செய்கிறோம் என்ற பெய ரில் தனியறையில் அடைத்து வைத்து அவ ரின் ஆடைகளை களைந்து மனித உரிமை மீறலை காவல்துறை நிகழ்த்தியிருந்தது.  இந்த மனித உரிமை மீறலுக்கு தமிழ கத்தின் அனைத்து தரப்பட்ட மக்களும்,  இயக்கங்களும் கடுமையாக கண்டனங் களை தெரிவித்திருந்தனர். மாணவர் சங்கம் தலைமையில் மாநிலம் முழு வதும் போராட்டமும் நடைபெற்றது. இத னைத்தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தின் டிஜிபி உள்ளிட்ட அனைத்து அரசு உயர் அதிகாரிகளிடமும் புகார் மனு அளிக்கப் பட்டிருந்தது. 

அதன் ஒரு பகுதியாக  மே 19 அன்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இரா. திருமூர்த்தி  தலைமையில்  இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களுடன் சென்று மாநில மனித உரிமை ஆணை யத்திடம் நேரில் புகார் மனு அளிக்கப் பட்டது. குறிப்பாக மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் விவரங்களையும், நிகழ்வையும் விரிவான தகவலுடன் புகாராக வழங்கப்பட்டது. மனித உரிமை ஆணையத்தின் பதி வாளர், இந்த பிரச்சனையில் ஏற்கனவே தாமாக முன்வந்து வழக்கு பதிந்து இருப்ப தாக தகவல் தெரிவித்தார். மேற்கொண்டு மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவரான உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி பாஸ்கர், துரித மான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி யதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி,  இளம் வழக்கறிஞர்கள் அருண், கிஷோர், சிவ சேகர், வினோத் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் நிருபன் சக்கரவர்த்தி, மத்தியக்குழு உறுப்பினர்  மிருதுளா, மாநில நிர்வாகிகள்  சம்சீர் அகமது, காவியா,  பாரதி, சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த், அருண், குணா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.