சென்னை, அக்.4- தமிழ்நாடு மக்களுக்குப் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பாலில் கொழுப்புச் சத்து அடிப்படையில், பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை,நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 15 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் நேரடி ஆவின் பாலகங்கள், பால் முகவர்கள் ஆகியோருக்கு பச்சை நிற பால் பாக்கெட் (4.5 விழுக்காடு கொழுப்புச் சத்துள்ள நிலைப் படுத்தப்பட்ட பால்) விநியோகம் 50 விழுக்காடு வரை குறைக்கப் பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப் பட்டது. திமுக தேர்தல் வாக்குறுதிப் படி, பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டு ரூ.44 என நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
இது 500 மிலி ரூ.22-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பால் விற்பனை வாயிலாக ஆவினுக்கு லிட்டருக்கு ரூ.7 நட்டம் ஏற்படுகிறது. இதைக் காரணம் காட்டி, பச்சை நிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக, நீல நிற பசும்பால் பாக்கெட் (சமன்படுத் தப்பட்ட பால்) அனுப்பப்பட்டது. இந்த பால் 3.5 விழுக்காடு கொழுப்புச் சத்து கொண்டது. விரைவில் பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் 70 விழுக்காடு வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் செய்திகள் உலா வந்தன. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் வினீத் கூறும்போது, ``அனைத்து வகை பால் பாக்கெட்களையும் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள் ளோம்”என்றார். சந்தையில் தேவைக்கு ஏற்ப, சில வகை பால் பாக்கெட்டுகள் அதிகம் விநியோகம் செய்யப் படும். ஆனால், எந்த வகை பால் பாக்கெட்டுகள் விநியோ கத்தையும் குறைக்கவில்லை என்றும் அதே நேரத்தில், நீல நிற பாக்கெட் பாலுக்கு அதிக வரவேற்பு உள்ளதால், அதிக மாக விநியோகம் செய்யப்படுகி றது என்றும் அவர் கூறினார். தமிழ்நாட்டில் பால் கொள் முதல் குறையவில்லை. தினசரி 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.