பசிபிக்கில் உள்ள மிகச்சிறிய நாடான நியூ (Niue) தன் பரந்த தூய கடற்பகுதியைக் காக்க தன் எல்லைக்குட்பட்ட கடலை விற்கும் நூதனத் திட்டத்தை அறிவித்துள்ளது. நியூயார்க்கில் சமீபத்தில் இந்நாட்டின் பிரதமர் டால்டன் டெஜ்லாஹி (Dalton Tagelagi) அறிவித்த) இந்த நூதன திட்டத்தின்படி தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்புள்ள கடலை 148 டாலர் கொடுத்து வாங்கலாம்.
இருபது ஆண்டுகளுக்கு செயல் படவுள்ள இத்திட்டம் அந்நாட்டின் கடற் பரப்பை வெகுவாக பாதித்து வரும் மிதமிஞ்சிய சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் பிளாஸ்டிக் மாசைத் தடுக்கும் என்று நம்பப்படு கின்றது. தனது 127,000 சதுர கிலோ மீட்டர் அலகுகள் கடற்பரப்பை விற்ப தன்மூலம் 18 மில்லியன் டாலர் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள் ளது. இது நியூ நாட்டின் எவராலும் கைப்பற்றமுடியாத கடற்பாதுகாப்பு பகுதியில் (no-take marine protected area) 40%. கடல் இந்த நாட்டு மக்கள் அனை வரின் வாழ்வுடன் நெருங்கிய தொடர்புடையது. பசிபிக்கின் நீலக் கடலில் பெரும் பரப்பில் அமைந் துள்ள எண்ணற்ற சிறிய தீவுகளில் இந்த நாடும் ஒன்று. கடலால் நான்கு புறமும் சூழப்பட்ட இந்த நாடு கடலை நம்பியே வாழ்கிறது. கடலே இங்கு வாழும் மக்களின் உயிர்நாடி. இதுவே இவர்களின் வாழ்வாதாரம். பல காலங்களுக்கு முன் இங்கு வந்து வாழத்தொடங்கிய இந்நாட்டு மக் கள், அவர்களின் முன்னோரிடம் இருந்து கடலைப் பற்றிய அறிவைப் பெற்றனர்.
தங்களிடம் முன்னோர் கொடுத்த அதே ஆரோக்கியத்துடன் நிலை யான நீடித்த தன்மையுடன் கடல் செல்வத்தை வருங்காலத் தலை முறையினரிடம் ஒப்படைக்க மக்கள் விரும்புகின்றனர் என்று டெஜ்லாஹி கூறுகிறார். ஒரு சில வணிக மற்றும் தொழில்ரீதியான ஆழ்கடல் மீன் பிடித்தல்கள் நடக்கின்றன. என்றாலும் இங்கு நடக்கும் பெரும்பாலான மீன் பிடித்தலும் உள்நாட்டுத் தேவைக்காகவே பயன் படுத்தப்படுகிறது என்று ஐநாவின் உலக உணவு மற்றும் விவசாயக் கழ கம் (FAO) கூறுகிறது. இப்போது இங்கு நிகழும் சட்ட விரோத மீன் பிடித்தல் மற்றும் பிற செயல்களால் கடலை பாதுகாக்க, உலகிற்கு ஒரு பாடம் கற்பிக்க, அதன் மூலம் மற்ற நாடுகளுக்கு ஒரு சிறந்த முன் மாதிரியாக விளங்க இத்திட்டம் கொண்டுவரப்படுகிறது என்று அவர் கூறுகிறார். கட்டுப்பாடுகள் இல்லாத மீன் பிடித்தல் மீட்கமுடியாத கடல் மீன் வள அழிவை ஏற்படுத்தும். பிளாஸ்டிக் கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களை கொல்கின்றன. காலநிலை மாற்றம் கடலை சூடு படுத்துகிறது. அமிலத்தன்மையுடை யதாக்குகிறது. இது ஆழ்கடல் வாழ் உயிரினங்களின் வாழிடச்சூழலை மாற்றியமைக்கிறது. கடல்நீர்மட்ட உயர்வு மற்றும் நன்னீர் வள அழிவி னால் இந்த நாடு பாதிக்கப்பட்டுள் ளது. இதனால் இங்கு கடற்புயல்கள் அதிகம் நிகழும் வாய்ப்பு ஏற்பட்டுள் ளது. வெறும் 1,700 மனிதர்களை மட்டுமே மக்கதொகையாகக் கொண்ட இந்த நாடு உலகில் மிகச் சிறிய நாடுகளில் ஒன்று. நிலப்பகுதித் தொகுப்பை (land mass) விட இந்நாட்டின் கடற்பரப்பு 1,200 மடங்கு அதிகம். கடல் பாது காப்பு பொறுப்பேற்பு (Ocean Conservation Commitments) என்று அழைக்கப்படும் இத்திட்டன் மூலம் சேகரிக்கப்படும் நிதி ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தால் மேலாண்மை செய்யப்படும். இந்த நாடு தன் குடிமக்களுக்காக 1,700 பங்குகளை வாங்குகிறது. இதன் மூலம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு சதுர கிலோமீட்டர் அலகு (unit) பங்கு கிடைக்கும்.
கடலை வாங்கும் பங்குதாரகள்
மற்ற குறிப்பிடத்தக்க பங்குதாரர் களில் பிரபல ப்ளாக் சங்கிலித் தொழில்நுட்ப ரிப்பிள் (Ripple) நிறு வனத்தின் தோற்று நர்களான புகழ் பெற்ற மானுட நன்மைக்காக தன் னார்வத்துடன் நிதிமற்றும் பிற உத விகள் செய்யும் சமூக செயல்பாட்டா ளர் (philanthropist) லினாலாம் (Lyna Lam) மற்றும் அவரது கண வர்கிறிஸ் லார்சன் (Chris Larsen) ஆகியோரும் அடங்குவர். இத்திட்டத்திற்காக சில தொழில் நுட்ப உதவிகள் செய்த யுஎஸ்ஸை சேர்ந்த லாப நோக்கமில்லாமல் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான சர்வதேச பாதுகாப்பு சங்கம் (Conservation Inter national) இதில் ஒரு பங்குதாரர். கடலால் சூழப்பட்டு கடலை நம்பி யே வாழும் இந்த சிறிய நாட்டின் நூதனமான கடல் காக்கும் இத் திட்டம் மிதமிஞ்சிய பீன் பிடித்தல், பிளாஸ்டிக் மாசு, காலநிலை மாற்றம், புவி வெப்ப உயர்வு, கடல்நீர் மட்ட உயர்வு போன்ற சூழல் சீர்கேடு களால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங் கும் என்று ஆய்வாளர்கள் நம்பு கின்றனர்.