tamilnadu

img

மனிதனை நேசிப்பவரே கம்யூனிஸ்ட்!

“கம்யூனிஸ்ட்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மை யுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண  மனித இன்பங்களின் மதிப்பை யும் நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவே தான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமைகளிலிருந்து, அதாவது, பயங்கரப் போரின்  துன்ப துயரங்கள், வேலை யில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து விடு விக்கப்பட்டு, மகிழ்ச்சியும் நிறை வும், ஆரோக்கியமும் சுதந்திர மும் உள்ள மனிதனுக்கு, இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்ப தற்காக, எங்கள் சுகபோகங்க ளைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை. லாபம், லாபம், மீண்டும் லாபம்! இதையே குறிக்கோளா கக் கொண்ட ஒரு அமைப்பு, மனிதனைக் காட்டிலும் பணத்திற்கே அதிக மதிப்பைத் தருகிற ஒரு அமைப்பு மனிதத் தன்மை அற்றதாகும். மனிதனை நேசிக்கிற ஒரு மனிதனுக்கு ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு, மக்களின் மனிதத் தன்மை பறிக்கப்படுகின்ற பொழுது, சும்மா இருக்க உரிமை உண்டா? இல்லை. எனவேதான், நிறைவும்  சுதந்திரமும் பண்பும் பொருந்திய மனிதனுக்காகப் போராடுவதில், தங்கள் முழு வலிமையை பயன்படுத்தவோ, தியாகம் செய்யவோ கம்யூனிஸ்ட்டுகள் பின் வாங்குவதில்லை!” பெரணமல்லூர் சேகரன்