* 0-6 வயதுக்குட்பட்ட அனைத்து குழந் தைகளையும் உள்ளடக்கும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச் சிப் பணிகள் திட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஐ.சி.டி.எஸ்ஸை தனியார்மயமாக்குவதற்கான அனைத்து
நடவடிக்கைகளையும் திரும்பப் பெற வேண்டும்; அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சத்துணவு கிடைப்பதை உறுதி செய்யவும், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் காப்பக வசதிகளை ஏற்படுத்தவும் ஒரு குழந்தைக்கு என்ற அளவில் அதிக நிதி ஒதுக்கீடு.
* 3-18 வயதுக்குட்பட்ட அனைத்து குழந் தைகளையும் உள்ளடக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தை விரிவு
டக்கிய கல்வி தொடர்பாக மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 இல் உள்ள விதிகளை அமல் படுத்துதல்.
* போதுமான எண்ணிக்கையில் அருகாமையில் குழந்தைகளுக்கு உகந்த வகையில் விளையாட்டு மைதானங் களை அமைத்தல்.
* அனைத்து வகையான குழந்தைத் தொழிலாளர்களையும் தடை செய் வது; அனைத்து வகையான குழந் தைத் தொழிலாளர்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய திட்டங் களை செயல்படுத்துவதை உறுதி செய்வது; குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் முறைப்படுத்துதல் சட்டம்) சட்டத்தில் திருத்தங்கள் மேற் கொள்வது.
* ஆதிவாசிகள், தலித் மற்றும் சமூக ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக் களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பிறருக்கு இடையே தொடர்ந்துவரும் இடைவெளியை நவீன வசதிகளுடன் கூடிய உறைவிடப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை அமைப்பதற்கான கூடுதல் ஒதுக்கீடுகள் உள் ளிட்ட குறிப்பிட்ட நடவடிக்கைகள் மூலம் இட்டு நிரப்புவதற்கான சிறப்பு நடவடிக்கைகள்; எந்த மட்டத்திலும் பாகு
பாட்டிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை.
* துணை ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு,முன்பள்ளி, முறைசாராக் கல்வி, வழக்கமான சுகாதார பரிசோதனைகள் மற்றும் விரைவான பரிந்துரை சேவைகள் போன்ற அடிப்படை சேவை களை முழுமையாக உள்ளடக்குதல்.
* பாலியல் குற்றங்களிலிருந்து குழந் தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண் டும்.
* தெருவோரக் குழந்தைகளுக்கு தங்குமிடம் மற்றும் சமூக சேவைகளை வழங்குதல்; காணாமல் போன குழந் தைகளை கண்டுபிடிக்க மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள்.
* இளைஞர் நீதி அமைப்பு மற்றும் நிறுவனங்களில் முழுமையான மறுசீரமைப்பு மற்றும் சீர்திருத்தத்தை உறுதி செய்தல், அவர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக சமுதாயத்தில் மீண் டும் ஒருங்கிணைய உதவுவதற்கு அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.